Quantcast
Channel: எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL
Viewing all 397 articles
Browse latest View live

யாரிடம் கோளாறு?

$
0
0


சிவனே என்று இருந்தேன்                 
சிவனை பார்த்த துண்டா
என்றே வினவு கிறார்கள்.!

சீர்திருத்தம் பேசி நின்றால்
உன்வீட்டில் செய்து விட்டாயா
என்றே எட்டிப் பார்க்கிறார்கள்.!

சாலையிலே கொட்டும் குப்பையை
அமைதியாக தடுத்துச் சொன்னாலும்
உன்வேலையைப் பார் என்கிறார்கள்!

வீதியிலே ஜோடியாய் இரண்டுபேர்
யார் வீட்டுப் பிள்ளைகள் என்று பார்த்தால்
கொள்ளிக்கண் என்றே குமுறுகிறார்கள்!

எதிர்திசையில் வண்டியில் வருபவரை
சரியான பாதையில் வரச்சொன்னால்
நீஒழுங்காய் பார்த்துப் போ என்கிறார்கள்!

ஓட்டு கேட்டுவரும் கவுன்சிலரிடம்
கோரிக்கைகள்  சிலவற்றை வைத்தால்
தெருக்காரரே என்னை முறைக்கிறார்!

மளிகை கடைக்குச் சென்று
அரிசியில் ஒரே கல் என்றேன்
இனி வேறுகடை பாருங்கள் என்றார்!

வலையுலகில் பதிவை திருடுகிறார்கள்
என்செய்வது என்றே புலம்பினேன்
கவலைப் படாதே என்றார்கள்!


யாரிடம் கோளாறு என்றே
என்னுள் கேட்டேன் - அதுவோ
உன்னிடம்தான் என்றே சொன்னது.



( PICTURE :  THANKS TO  “ GOOGLE ” )





கவிஞர் கவி அருவி பி.கலைமணி

$
0
0



ஒருமுறை திருச்சியில் ஹால் ஒன்றில் நடந்த இலக்கிய கூட்டத்திற்கு சென்று இருந்தேன். கவிஞரை பேச அழைத்தார்கள். மேடையில் ஏறியதும்

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக 

 - பாடல்: கவிஞர் வாலி (படம்: பாசம்)

என்று தொடங்கும் எம்ஜிஆர் படப் பாடல் ஒன்றினை ராகம் மாறாமல் முழுதும் பாடினார். அதன் பிறகுதான் அவர் தனது பேச்சையே தொடர்ந்தார். அவர் எப்போதுமே மேடையில் பேசுவதற்கு முன் இந்த பாடலை பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர்தான் கவிஞர் கவிஅருவி பி.கலைமணி.மேடைகளில் பாடும் திறனோடு கவி எழுதுவதிலும் வல்லவரான இவர் புள்ளி இயல் உதவி இயக்குநராக , பொருளியல் மற்றும் புள்ளி இயல் துறை , திருச்சி மாவட்ட ஆசிரிய கல்வி பயிற்சி மற்றும் நிறுவன அலுவலகம், குமுளூரில் பணி புரிந்து வருகிறார். மேலும் அவர் ஒரு பட்டிமன்றப் பேச்சாளர்; இலக்கிய சொற்பொழிவாளர், மேடைப் பாடகர் ( இசைக் குழுக்களில் தற்போது பாடியும் வருகிறார்). 

ஆசிரியர் பெற்ற விருதுகள்:

1.கவி அருவி
2.வியன்கவி வேந்தர் 
3.சிகரம் தொட்ட சாதனையாளர்
4.பல்துறை வித்தகர்
5.சிந்தனைப் பேரொளி
6.மனித நேயக் கவிஞர்
7.சாதனைக் கவிஞர்
8.இசை அரசு
9.கல்விக் காவலர்
10. மத நல்லிணக்க நாயகர்
11.கர்மவீரா காமராஜர் விருது
12.பாரத ரத்னா ராஜிவ்காந்தி விருது
13.டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் விருது
14.வாழ்வியல் சிந்தனைச் செம்மல்

அவருடைய நூல்கள் பற்றிய எனது விமர்சனம்.



கவி அருவி கலைமணி கவிதைகள்

இந்தகவிதைநூலில்கவிஞரின்எளிய நடையில் அமைந்த பல கவிதைகளைக் காணலாம். மனைவி என்ற தலைப்பில் ஒரு கவிதை (பக்கம் 17)

சிந்தனையில் தாயாக
சிரிப்பினில் சேயாக
மொழியினில் தமிழாக
மொழியவள்நல் மனைவி!

உயர்ந்தவர்கள் என்ற கவிதையில் (பக்கம் 35)

நாடு போற்றும் நல்லவர்கள்
நற்பண்பை வளர்ப்பவர்கள்
பீடு மிகவும் கொண்டவர்கள்
பிறரை என்றும் மதிப்பவர்கள்!

கவிநர் தமிழ்ப் பற்றோடு நாட்டுப் பற்றும் மிக்கவர். இந்தியனாக வாழ்ந்திடுவோம்என்ற கவிதையில்

இந்தியனாக வாழ்ந்திடுவோம்!
ஏழ்மை வறுமை ஒழித்திடுவோம்!
இயன்ற வரையில் உழைத்திடுவோம்!
இல்லாமையினை விரட்டிடுவோம்!

என்றே முழங்குகிறார்.

நூல் வெளியீடு: க.பெர்னாட்ஷா பதிப்பகம், எண் 5, ஐஸ்வர்யா எஸ்டேட், கொட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி 620 004 அலைபேசி எண்: 98659 52478
(நூலின் விலை ரூ 40/= பக்கம் -103)

நெஞ்சம் எனும் வானிலே

நெஞ்சம் எனும் வானிலேஎன்ற ஒரு கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு இருக்கிறார். நூல் முழுவதும் அழகு தமிழில்  சின்னஞ் சிறு அடிகளில் அமைந்த ஒரு பக்கக் கவிதைகள். இயற்கை, சமுதாயம், உறவுகள், பல்சுவை என்று பல கவிதைகள். ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு தலைப்பு கொடுத்து இருக்கிறார்.

தனது கவிதை நூலினை 

செம்மொழி உயர்வைப் பெற்றவளே
சிந்தைக்கு இனிய என் தமிழே
உலகில் உள்ள மொழிகளிலே
உயரிய மொழியே நீதானே!

என்று தமிழன்னை வாழ்த்தோடு (பக்கம் 20 ) தொடங்குகிறார்.

மலைச் சாரலில்  என்ற தலைப்பில்

விடியற் காலையில்
வீசிடும் சாரலில்
இதயம் குளிர்கிறதே
என்னில் இன்பம் சுரக்கிறதே! (பக்கம் 21)

எது வசந்தம்? என்று வினா எழுப்பி அவரே விடைகளையும் ஒரு பக்கத்தில் தருகிறார். (பக்கம் 31). இறைவனிடம்

என்னை உலகுக்கு கொடுத்த இறைவா
எல்லோர் மனதிலும் மகிழ்வை ஊட்டு
ஏழ்மை தாழ்மை இவற்றை நீக்கி
இனிக்கும் வாழ்வைக் கொடுத்தருள்வாயே!

என்று கேட்கிறார். (பக்கம் 40 ) ஆசிரியர் பெருமை குறித்து,

வாழ்வைச் சொன்னவர் இவரே
வாழ்க்கைக் கல்வியும் இவரே
பாட்டால் கதையால் என்றும்
பண்படுத்தியவரும் இவரே!

என்ற வரிகளால் சிறப்பிக்கிறார்.  (பக்கம் 45 ) எது வேண்டும் என்று? ஒரு இடத்தில் கேட்கிறார் கவிஞர். (பக்கம் 49)

அறிவு வேண்டுமா? நூல்களைப் படி!
அன்பு வேண்டுமா? உயிர்களை நேசி!
உயர்வு வேண்டுமா? கடினமாய் உழை!
உவகை வேண்டுமா? இல்லறம் பேணு!

இலக்கியம் என்னும் தலைப்பில்

இலக்கியம் படிப்பது இன்பத்தைக் கொடுக்கும்
இதயம் சிறக்க அறிவை வளர்க்கும்
கவிதைகள் தோன்றும் கற்பனை பெருகும்
காலம் முழுதும் இதயமோ நெகிழும்

என்று உரைக்கிறார். .  (பக்கம் 91) இன்னும் உலகம், வாழ்க்கை, சமத்துவம், அறிவு என்று பல்வேறு தலைப்புகளில்.

நூல் வெளியீடு: க.பெர்னாட்ஷா பதிப்பகம், எண் 5, ஐஸ்வர்யா எஸ்டேட், கொட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி 620 004 அலைபேசி எண்: 98659 52478
(நூலின் விலை ரூ 80/= பக்கம் -112)

சிந்தனை மின்னல்கள்

அடுத்து சிந்தனை மின்னல்கள்  என்று கவிஞரின் கட்டுரை தொகுப்புகள் அடங்கிய நூல். கவிஞர் எம்.ஏ பொருளியல் படித்தவர். புள்ளியியல் துறையில் அதிகாரி. அதன் தாக்கம் நூலின் பல இடங்களில் எதிரொலிக்கிறது.

முதல் கட்டுரை அம்மாவும் அன்னைத் தமிழும். இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தனது ஆட்சியில் தமிழின் வளர்ச்சிக்கும் , தமிழ் மொழியின் உயர்வுக்கும் செய்த பணிகளை விவரிக்கின்றார். மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது, மாணவர்களுக்கு அளித்த சலுகை, தமிழ் மொழிக்கான விருதுகள் என்று அவர் ஆட்சிக் கால
சாதனைகளை பட்டியலிடுகிறார்.

பண்டைத் தமிழர் வாழ்வியல் பண்பாடு, தாய்மொழி வழிக் கல்வி, சமுதாய மறுமலர்ச்சி என்று நூலின் பல இடங்களில் தனது கருத்துரைகளை தந்துள்ளார்.

கவிஞர் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்தவர். அந்த கிராமத்து பொங்கலையும் அந்த மண்ணின் மக்களையும் மறக்க முடியாதவர்.“ பொங்கல் விழா “ என்ற தலைப்பில் சுவையான செய்திகள் தருகிறார்.

தமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர் நம் கவிஞர் பி. கலைமணி அவர்கள். நூலில் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய இலக்கிய நூல்களைப் பற்றியும். மகாகவி சுப்ரமண்ய பாரதியாரைப் பற்றியும்,  அறிஞர் அண்ணாவின் எழுத்துகளைப் பற்றியும் இலக்கிய ரசனையோடு எழுதியுள்ளார்.

நம்பிக்கையுடன் பா.விஜய் - என்று  அந்த கவிஞரைப் பற்றியும் சிறப்பித்து பேசுகிறார்.

மேலும் குறளில் இல்லறம், கவிஞர் கண்ணதாசன் திரை இசைப் பாடல்களில் பெண்மையும் தத்துவமும், பாரதியும் இலட்சியப் பெண்மையும், கற்றபடி நிற்க, எண்ணித் துணிக, செல்வம் என்பது சிந்தையின் நிறைவும் சமத்துவ உணர்வு சிந்தனைகள், நாடு உயர  போன்ற அற்புதமான தலைப்புகளில் கட்டுரைகளை தந்துள்ளார்.

தமிழ் வளர்ச்சி இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் இந்த நூலுக்கு வாழ்த்துரை தந்துள்ளமை இந்நூலுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

நூல் வெளியீடு: க.கிருஷ்ணகுமாரி பதிப்பகம், எண் 5, ஐஸ்வர்யா எஸ்டேட், கொட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி 620 004 அலைபேசி எண்: 98659 52478
(நூலின் விலை ரூ 100/= பக்கம் -166)












காதலும் ஜாதியும்

$
0
0



நெஞ்சம் மறப்பதில்லை என்று ஒரு பழைய தமிழ் திரைப்படம். டைரக்டர் ஸ்ரீதரின் இயக்கத்தில் கல்யாண்குமார் தேவிகா நடிப்பில் உருவான படம்.போன ஜென்மத்தின் போதுதனது பண்ணையில் வேலை செய்யும் பண்ணையாள் மகளை (தேவிகா) அந்த ஜமீனின் ஜமீன்தார் மகன் (கல்யாண்குமார்) காதலிக்கிறார்.

அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை நெஞ்சில்
ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை

இரவுக்கும் பகலிடம் கோபமில்லை இந்த

ஏழையின் காதலில் பாபமில்லை
  
-         (பாடல் : கண்ணதாசன்)


என்று பாடித் திரிகிறார்கள். இது பிடிக்காத ஜமீன்தார் (நம்பியார்) காதலர்கள் இருவரும் குதிரை வண்டியில் தப்பும்போது, அந்த பெண்ணை தனது வேட்டைத் துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுகிறார். அவள் இறந்த சோகத்தில் ஜமீன்தார் மகனும் இறந்து விடுகிறார். அப்போதைய வெள்ளைகாரர்கள்  அரசு ஜமீன்தாருக்கு தண்டனை தந்து அந்தமான் சிறைக்கு அனுப்பி வைக்கின்றனர். சிறை தண்டனை முடிந்து வந்த அந்த ஜமீன்தார் தனது அரண்மனையில் மறைந்து வாழ்கிறார். காதலர்கள் இருவரும் . அடுத்த ஜென்மத்தில் பிறக்க விதி வசத்தால் அவர்கள் காதல் தொடருகிறது.

நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை

நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்

கண்களும் மூடவில்லை
   - (பாடல் : கண்ணதாசன்)

இதனை அறிந்த, (அவர்களது அடுத்த ஜென்மத்திலும் உயிரோடு இருக்கும்) 109 வயதுள்ள கிழட்டு ஜமீன்தார் இந்த ஜென்மத்திலும் உங்களை சேர விடமாட்டேன்என்று அந்த பெண்ணை சுடுவதற்கு தனது பழைய துப்பாக்கியை தூக்குகிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஜமீன்தார் புதை மணலில் சிக்கி இறக்கிறார். போன ஜென்மத்தில் சேரமுடியாத காதலர்கள் இந்த ஜென்மத்தில் சேருகின்றனர். (கடைசி உச்சகட்ட (Climax) காட்சியில் நம்பியாரின் பயங்கரமான தோற்றம், ஆவேசமான நடிப்பு இவைகளை மறக்க முடியாது.) இந்த படத்தில் காதலின் வலுவான சக்தி எது என்பதனை ஸ்ரீதர் காட்டியுள்ளார்.


எட்டி மரம். அதன் அருகில் ஒரு முல்லைக் கொடி. அது ஒன்றினை பற்றிப் படரும் இயல்புடையது.  அந்த முல்லையானது எட்டிமரம் என்று விலகுவதில்லை. அதன் மீது படரத்தான் நினைக்கிறது. இதனை மனோன்மணியம் இவ்வாறு கூறுகிறது.


பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள்;
அருகுள
து  ட்டியே யாயினும் முல்லைப்
படர்கொடி படரும்
(மனோன்மணியம் - முதல்அங்கம்: ஐந்தாம்களம்)

கவிஞர் கண்ணதாசன் காதல் பாடல்கள் பல இதனைத்தான் சொல்லுகின்றன.தாழையாம் பூ முடிச்சு என்று தொடங்கும் பாடலில் கவிஞர்

மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்

கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
          -  பாடல் : கண்ணதாசன்  ( படம்: பாகப்பிரிவினை)

என்ற வரிகளைச் சொல்லுகிறார். இன்னொரு இடத்தில்

காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே

வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே அது

வேதம் செய்த உருவம் போல மறைவதில்லையே

         - பாடல் :கண்ணதாசன்  ( படம்: பாவமன்னிப்பு)

என்று பாடுகிறார்.

அவள் ஓர் செவிலித் தாய். கண்ணுக்கு கண்ணாய் வளர்த்த அவளது பெண் தன் காதலனுடன் சென்றுவிட்டாள். தன் மகளையும் அவளது காதலனையும் தேடி பாலை நிலத்தில் செல்கிறாள். எதிரே ஒரு ஜோடி. அந்த பெண் அவளது மகளைப் போலவே இருக்கிறாள். அருகில் சென்று பார்த்தாள். அவள் வேறு ஒரு பெண். இது போல் பல ஜோடிகள். தேடித் தேடி அவளது கால்கள் நடை தளர்ந்து விட்டன. கண்கள் ஒவ்வொருவரையும் உற்று உற்று பார்த்து ஒளி இழந்து விட்டன. அப்போதுதான் அவளுக்கு தெரிகிறது. தனது மகளையும் அவளது காதலனையும் போன்று உலகில் வானத்து நட்சத்திரங்களைப் போன்று அநேகர் என்று.இனி எங்கு தேடுவேன் என்று  அவர்களை மனதால் வாழ்த்திவிட்டு அந்த தாய் திரும்பி விடுகிறாள்.

காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே

அகலிரு விசும்பின் மீனினும்

பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.
                             -  வெள்ளிவீதியார். ( குறுந்தொகை 44 )


பாரதியார்  தனது குயில் பாட்டில்

காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்

என்று கீதமிசைக்கிறார்.

பாரதிதாசன்

காதல்அடைதல்உயிரியற்கை - அது
கட்டில்அகப்படும்தன்மையதோ - அடி
சாதல்அடைவதும்காதலிலே - ஒரு
தடங்கல்அடைவதும்ஒன்றுகண்டாய். 
                                 -  (பாரதிதாசன்கவிதைகள்

என்று பாடியுள்ளார்.

இப்படி மேற்கோள்கள் பலவர்றை சொல்லிக் கொண்டே போகலாம்.

காதல் என்பதற்கு எந்த இலக்கணமும் கிடையாது. இலக்கிய படைப்புகள்தான் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன. யாரும் திட்டம் போட்டு காதல் கொள்வது கிடையாது. அது ஒரு இயற்கையான ஒன்று. இன்றைய சினிமாக்களிலும் சின்னத் திரைகளிலும் பழிவாங்கும் வில்லத்தனமான கதைகளில் காதலை கொச்சைப் படுத்தி விட்டார்கள்.








மர்ம காய்ச்சல்!

$
0
0


காய்ச்சல் வாங்கலையோ? காய்ச்சல்!
என்றே ஊரெங்கும் ஒரே கூச்சல்!
அந்த காய்ச்சல் இந்த காய்ச்சல்
என்ற பெயரில்லாமல் மர்ம காய்ச்சல்!
அழையாத விருந்தாளியாய் அன்போடு!
என்னையும் நாடி வந்தது துடிப்போடு!
இலவச இணைப்பாய் உடம்பு வலியோடு!
தொடர் பதிவுகள் போல  கடும் இருமலோடு!

உணவும் இல்லை!  உறக்கமும் இல்லை!
வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை!
பதிவுலகம் பக்கம் பார்க்க முடியவில்லை!
வந்தவர்களுக்கு பதிலும் தர இயலவில்லை!
இருப்பதும் ஓர் உயிர் என்றே புரிகின்றது!
பத்து பதினைந்து நாட்கள் ஆனபின்னும்
அந்தோ அவதிப் பட்டேன் நாளும்!
மருத்துவரைக் கண்டதும் ஓடியது காய்ச்சல்!
எனக்கு வரவில்லை இன்னும் பாய்ச்சல்!


 ( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )


எனது விகடன் நினைவுகள்!

$
0
0


அப்போது எனக்கு பள்ளி பருவம். வெளி உலகை கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்க்கும் நேரம். அப்போது ஒரு திருமணத்தை முன்னிட்டு  திருச்சியிலிருந்து பூதலூருக்குரெயிலில் சென்றோம். திருச்சி ரெயில்வே ஜங்ஷன். டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஒரு விளம்பரப் பலகை. முழுக்க கருநீல வண்ணத்தில் வெள்ளை எழுத்துக்களில் “இந்த வார ஆனந்த விகடன் வாசித்து விட்டீர்களா?என்ற வாசகத்தோடு காணப்பட்டது. கூடவே சோடா பாட்டில் கண்ணாடி போட்டுக் கொண்டு நீண்ட மூக்குடன் விகடன் தாத்தா. ரெயில் ஏறப் போகும்போதும் பிளாட்பாரத்திலும் அதே விளம்பரம் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டு இருந்தது. நாங்கள் பூதலூர்  சென்று ரெயிலை விட்டு இறங்கியதும் ரெயில்வே ஸ்டேஷனிலும் இந்த விகடன் விளம்பர பலகையைப் பார்த்தேன். இந்த வாரம் அந்த ஆனந்தவிகடனில் அப்படி என்னதான் எழுதி இருக்கிறார்கள் என்று எப்போது பார்த்தாலும்  நினைக்கும்படி விளம்பரம் செய்து இருந்தார்கள்.  இதுதான் எனது முதல் ஆனந்த விகடன் நினைவு. அதன் பிறகு பல ரெயில்வே நிலையங்களிலும் இந்த விளம்பரப் பலகைய பார்த்து இருக்கிறேன். 

நான் பள்ளி படித்த நாட்களில் வார இதழ்களை மாணவர்களுக்கு
தர மாட்டார்கள். கல்லூரி நாட்களிலும் நூலகங்களில் அந்த வார விகடனை ஊழியர்களும் ஆசிரியர்களும் எடுத்துச் சென்று விடுவார்கள். இருக்கும்  விகடனைப் படிப்பேன். அப்போது நான் பெரும்பாலும் விகடனில் அதிகம் படிப்பது நகைச்சுவை துணுக்குகள், அரசியல் பேட்டிகள், கட்டுரைகள்தான். பிற்பாடு நான் வேலைக்கு சென்றதும் ஆபிஸ் ஊழியர்கள் தங்களுக்குள் நடத்தும் புத்தக கிளப் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள்.. புதிதாக வரும் அந்த வார ஆனந்த விகடனை வீட்டுக்கு கொண்டு செல்வதில் உறுப்பினர்களிடையே  அதிக போட்டி இருக்கும். எனவே வாரம் தோறும்  இரண்டு விகடன்களை வாங்கும் வழக்கத்தை கொண்டு வந்தேன்.

விகடன் குழுமத்திலிருந்து ஜூனியர் விகடன் வந்த நேரம். புதுமையாகவும் மக்களின் அன்றாட பிரச்சினைகளை அலசியும் கட்டுரைகளை வெளியிட்டார்கள். ஆரம்பத்தில் நியூஸ் பேப்பர் வடிவத்தில் வந்து பின்னர் இப்போதைய வடிவம் வந்தது. கடைகளில் வந்தவுடனேயே தீர்ந்துவிடும். எனவே ஜூனியர் விகடன் வரும் நாளன்று முதல் ஆளாக போய் வாங்கி வந்து படித்து விடுவேன். திருச்சிக்கு மாறுதலாகி வந்தேன். இங்கும் நண்பர்கள் புத்தக கிளப் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள்.. இங்கும் வாரம் தோறும் இரண்டு ஆனந்த விகடனோடு ஜூனியர் விகடனையும் இரண்டாக வாங்கச் செய்தேன். 

நான் கையில் யாஷிகா FX-3 கேமராவை வைத்துக் கொண்டு இருந்த நேரம். ஜூனியர் விகடனில் விஷுவல் டேஸ்ட் என்று ஒரு பகுதியைத் தொடங்கினார்கள். வாசகர்கள் அனுப்பும் புகைப் படங்களை ஜூனியர் விகடனின் பின்பக்க அட்டையில் வெளியிட்டார்கள். நான் எனது கேமராவில் எடுத்து அனுப்பிய வண்ண புகைப் படங்கள் இரண்டு அப்போதைய ஜூனியர் விகடனில் வெளிவந்தன. அதற்கு சன்மானமும் தந்தார்கள்.



இப்போது விகடன் குழுமத்திலிருந்து பல நூல்கள் வெளியிடப் படுகின்றன. வாசிப்பு பழக்கம் உள்ள நான் அவர்களது நூல்கள் பலவற்றை வாங்கியுள்ளேன். விலை குறைவாகவும் நேர்த்தியான முறையிலும் அவை வெளியிடப்பட்டு வருகின்றன.

வாரா வாரம் ஆனந்த விகடனில்இணைப்பு இதழாக "என் விகடன்"
என்ற இணைப்பு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித் தனியேகொடுத்து வந்தார்கள். இப்போது தனி இதழ் கிடையாது. இணைய இதழாக 
( http://en.vikatan.com ) மட்டுமே வந்தது. இதனையும் படித்து வந்தேன். இதிலும் சில மாற்றங்கள் செய்ய இருக்கிறார்கள். இனி “என் விகடன்” என்ற இணைய இதழ் “உங்க விகடன்” என்ற பெயரில் வரும் என்று அறிவிப்பு செய்து இருக்கிறார்கள். 

இப்போது ஆனந்த விகடனை எங்களோடு, எங்கள் வீட்டு பிள்ளைகளும் படித்து வருகிறார்கள்.



( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )
 















தமிழ் மணம்: வலைப்பதிவுகளின் தர வரிசை முதல் நூறு (1 - 100) பட்டியல்((Traffic Rank-2012)

$
0
0


அண்மையில் தமிழ்மணம்  தமிழ்வலைப்பதிவுகளின்தரவரிசை (Traffic Rank) முழுப்பட்டியல்வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ள முதல் நூறு பதிவுகளுக்கு மட்டும் அவற்றின் இணையதள முகவரிகளை இணைத்து ஒரே பதிவில் தந்துள்ளேன்.

எனது வலைப் பதிவு 83-ஆவது இடத்தில் வருகிறது. அனைத்து வலைப் பதிவர்களுக்கும் எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு 2013  நல் வாழ்த்துக்கள்!

நன்றி! :தமிழ்மணம்


5.பதிவின்பெயர் : அரசர்குளத்தான்
   Ramani
    பொறுப்பாசிரியர்: சீனா ..... ( Cheena )
     Sara
      DrPKandaswamyPhD
      ராஜி
14.பதிவின்பெயர் : அதிரடிஹாஜா
      NKS.HAJA MYDEEN
      sasikala
    www.gunathamizh.com
20.பதிவின்பெயர் :  அவர்கள்உண்மைகள்
      மதுரைத்தமிழன்
      kuttan
      கணேஷ்
      www.bloggernanban.com
      Abdul Basith
      அரசன்
      [No Data]
      AROUNA SELVAME
      www.nambalki.com
     Prabu Krishna
36. பதிவின்பெயர் : ஆத்மா(சிட்டுக்குருவி)
      ஆத்மா
     ANBUTHIL
     ஒசை.
     Jayadev Das
      www.sangkavi.com
      Lakshmi
      Jaleela Kamal
     சிவா
      www.nanparkal.com
      K.s.s.Rajh
      Reverie
65. பதிவின்பெயர் : பசுமைப்பக்கங்கள்
      அருள்
      வினவு!
      ஹேமா
74.பதிவின்பெயர் : அதிஷா
      அதிஷா
      www.rvsm.in
      RVS
      Star
78.பதிவின்பெயர் : என்ரசனையில்
79.பதிவின்பெயர் : கடவுளின்கடவுள்
     Raj.K
82.பதிவின்பெயர்   வே.மதிமாறன்:

85.பதிவின்பெயர் : நான்வாழும்உலகம்
     Riyas
86..பதிவின்பெயர் : மைந்தனின்மனதில்
      Jeeves
      R.Puratchimani
     Vijayakumar
93.பதிவின்பெயர் : படலை
     ஜேகே
94.பதிவின்பெயர் : மிராவின்கிச்சன்
     காவிரிமைந்தன்
     ananthu



(குறிப்பு:மேலே சொன்ன பதிவுகளை பார்வையிட அவற்றின் இணையதள முகவரிகளை சொடுக்கவும் (CLICK செய்யவும்)








இலக்கியப் பொங்கல்!

$
0
0

அனைவருக்கும்எனதுஉளங்கனிந்தபொங்கல்  நல்வாழ்த்துக்கள்! இலக்கியப் பொங்கலாக சில மேற்கோள் வரிகளைக் கீழே  தந்துள்ளேன்!




பொலிவுபொங்கிடும்
பொங்கற்புதுநாளில்
மகிழ்வுபொங்கிடும். நின்
மனையுளார்அனைவர்க்கும்,
என்வாழ்த்துதனைஅதற்குத்
தேனாக்கிக்கலப்பதற்கு
வழங்கிமகிழ்கின்றேன்.
வாழியநீஎன்றென்றும்,
வாழ்வும்வளமும்மங்காத
தமிழ்என்பார்!
தமிழ்வாழநாம்வாழ்வோம்.
அறிவாய்நன்றாய்!
நாம்வாழ்வில்பெறும்இன்பம்
கரும்பாகிடல்வேண்டும்
நாட்டினோர்க்கு.
'தை' அதனில்காணும்செல்வம்
தமக்கென்றேகொண்டனரோ
உழவர், மேலோர்!!
தாரணிக்குநாம்அளிக்கச்
செல்வம்காண்போம்.
நல்லறம்இஃதெனக்கண்ட'நம்பி'
நான்வாழ்த்துகின்றேன், உன்
வெற்றிக்காக!
-         அறிஞர் அண்ணா (திராவிடநாடு - 1963)
-         நன்றி: http://www.annavinpadaippugal.info


பொங்கலோபொங்கல்
பொங்கலோபொங்கல்
என்றுபாடுங்கள்
மன்றிலாடுங்கள்
எங்கள்நாடெங்கள்
அன்புநாடென்று
நன்றுபாடுங்கள்
பொங்கியாடுங்கள்
பொங்கலோபொங்கல்
பொங்கிற்றுப்பாலே!     
                     - புரட்சிக்கவிஞர்பாரதிதாசன் (பொங்கல்வாழ்த்துக்குவியல்)


தமிழ்நாட்டிலேபலசாதிகள்உண்டு; பலசமயங்கள்உண்டு. ஆயினும், ’தமிழர்அனைவருக்கும்பொங்கல்நாள்ஒருபுனிதநாள். அந்தநாளில், வீடுதோறும்சுதையின்விளக்கம்; வீதிதோறும்மங்கலமுழக்கம்; ‘பொங்கலோபொங்கல்என்பதேஎங்கும்பேச்சு.”
       - டாக்டர்ரா.பி.சேதுப்பிள்ளை , தமிழ்இன்பம், பக்கம்  52                          
 


பூஞ்சிட்டுக்கன்னங்கள்பொன்மணிதீபத்தில்
பால்பொங்கல்பொங்குதுபன்னீரிலே
பொங்கல்பிறந்தாலும்தீபம்எரிந்தாலும்
ஏழைகள்வாழ்வதுகண்ணீரிலே - இந்த
ஏழைகள்வாழ்வதுகண்ணீரிலே
                                                - கவிஞர்கண்ணதாசன் (படம்: துலாபாரம்)




 





இதுவும் கடந்து போகும் ( THIS TOO SHALL PASS )

$
0
0


வலைப்பதிவுகளில்அடிக்கடிநான்காணும்ஒருவாசகம்இதுவும்கடந்துபோகும்  என்பது. ஆங்கிலத்தில்THIS TOO SHALL PASS ” . இந்தவாக்கியத்தைஎப்போதோஎதிலோபடித்ததாகநினைவு! உடனேநினைவுக்குவரவில்லை. எனவேஅங்கும்இங்கும்தேடியதில்எழுதியதுஇந்தகட்டுரை.

சாலமன்மன்னன் ( KING SOLOMON)
 
பண்டையஒன்றுபட்டயூதாஇஸ்ரேல்நாட்டின்மன்னராஇருந்தவர்மன்னன்சாலமன் (King Solomon). இவர்தாவீதின்குமாரர். இசுலாமியர்கள்இவரைசுலைமான்என்றுஅழைக்கிறார்கள். இவரது ஆட்சியில் ஜெருசலேம்(Jerusalem) நாட்டின்தலைநகராகஇருந்தது. இங்குஉலகின்முதல்கோயிலை (First temple) சாலமன்கட்டியதாகச்சொல்கிறார்கள். மன்னன்சாலமனைப்பற்றிபலகதைகள்உண்டு. மன்னன் சாலமனின் தீர்ப்புகள் (Solomon's birth and judgments);  மன்னன் சாலமனின் அறிவுக் கூர்மை (Solomon's wisdom and knowledge);  மன்னன் சாலமனின் அதிகாரமும் பெருமையும் (Solomon's power and magnificence); மன்னன் சாலமனின் மந்திரக் கம்பளம் (Solomon's magic carpet); மன்னன் சாலமனும் இளவரசி ஷீபாவும் (Solomon and the Queen of Sheba; daughter of the pharaoh)என்று நிறைய கதைகள்.

சாலமன்என்றதும்எனதுநினைவுக்குவருவதுசின்னவயதில்நான்படித்த“ SOLOMON GRUNDY”  என்றஆங்கிலக்கவிதைதான். இந்தகவிதையை 1842 இல்  முதன்முதலில்தொகுத்துவெளியிட்டவர்James Orchard Halliwell என்பவர்.

Solomon Grundy,
Born on a Monday,
Christened on Tuesday,
Married on Wednesday,
Took ill on Thursday,
Grew worse on Friday,
Died on Saturday,
Buried on Sunday.
That was the end,
Of Solomon Grundy.

மேலே சொல்லப்பட்ட ஆங்கில கவிதை (Nursery rhyme) சொல்லும் சாலமன் க்ரண்டி,  மன்னன் சாலமனைக் குறிக்கவில்லை.

மன்னன் சாலமன்கேட்ட அதிசய மோதிரம்:

மன்னன்சாலமனுக்குவிசுவாசமானஒருஅமைச்சர்இருந்தார். பெயர்பெனையா பென் யெஹோயடா ( Benaiah ben Yehoyada.) ஒருநாள்அந்தஅமைச்சரிடம்சாலமன்  அமைச்சரே! ஒருஅதிசயமானமோதிரம்ஒன்றுஉள்ளது. அதனைநீகொண்டுவரவேண்டும். உங்களுக்குஅதனைக்கண்டுபிடிக்கஆறுமாதகாலம்அவகாசம்தருகிறேன். வரும்சுகோட் (Sukkot) திருவிழாசமயம்அதனைநான்என்கைவிரலில்அணியவேண்டும்என்றார். அமைச்சர்உடனேமாட்சிமைபொருந்தியமன்னரே! இந்தஉலகின்எந்தஇடத்தில்இருந்தாலும்நான்அந்தமோதிரத்தைக்கண்டுகொண்டுவருவேன்! அந்தமோதிரத்தில்அப்படிஎன்னஅதிசயம்உள்ளது?” என்றுகேட்டார். அதற்குமன்னன்சாலமன் " மகிழ்ச்சியாகஇருக்கும்ஒருவன்அந்தமோதிரத்தைப்பார்த்தால்துயரமாகிவிடுவான்; துயரமாகஇருக்கும்ஒருவன்அதனைபார்த்தால்மகிழ்ச்சியாகிவிடுவான் (“If a happy man looks at it, he becomes sad, and if a sad man looks at it, he becomes happy.") என்றுசொன்னார்.

வசந்தகாலம்முடிந்துகோடைகாலமும்வந்தது. அமைச்சரால்எங்குதேடியும்அந்தஅதிசயமோதிரத்தைக்கண்டுபிடிக்கமுடியவில்லை. அப்படிஒருமோதிரமேகிடையாது. மன்னன்விளையாட்டாகச்சொன்னதைக்கேட்டுஅமைச்சர்அதனைதேடிக்கொண்டிருந்தார். சுகோட்திருவிழாவிற்குமுதல்நாள்ஜெருசலேம்நகரின்கடைத் தெருவில்சோகமாகசென்றுகொண்டிருந்தார்அமைச்சர். அப்போது  வியாபாரத்தைமுடித்துவிட்டுதனதுபொருட்களைபழையகம்பளவிரிப்புஒன்றில்வைத்துமூட்டைகட்டிக்கொண்டிருந்தபெரியவர்ஒருவரைக்கண்டார். தான்வந்தகாரியத்தைஅவரிடம்சொன்னார். அந்தபெரியவர்தனதுகம்பளவிரிப்பைத்திறந்துஒருதங்கமோதிரத்தைஎடுத்துஅதன்மேல்சிலசொற்களைசெதுக்கிகொடுத்தார். அந்தமோதிரத்தில்இருந்தவாக்கியத்தைப்படித்துப்பார்த்தஅமைச்சரின்முகத்திலேபுன்னகைதோன்றியது. மோதிரம்கிடைத்துவிட்டது.

அடுத்தநாள்சுகோட்திருவிழா. அரசவையில்மன்னன்சாலமன்அமைச்சரிடம்புன்னகைத்தவாறேஎன்னநண்பரே! பொருள்கிடைத்ததா?” என்றுகேட்டார். எல்லோரும்நகைப்புடன்அமைச்சரைப்பார்த்தனர். உடனேஅமைச்சர்அனைவரும்ஆச்சரியப்படும்வண்ணம்மாட்சிமைபொருந்தியமன்னருக்கு! இதோ!” என்றுதான்வாங்கியமோதிரத்தைக்கொடுத்தார். மோதிரத்தைவாங்கியமன்னர்சாலமன்அதன்மேல்இருந்தவாசகங்களைப்படித்தார்.அவதுமுகத்தில்இருந்தபுன்னகைமறைந்தது


அந்தமோதிரத்தின்மேல்  ” இதுவும்கடந்துபோகும்  (THIS  TOO SHALL PASS )“  என்றஅர்த்தம்பொதிந்தமூன்றுஹீப்ருமொழிசொற்கள்இருந்தன. அதனைப்படித்தமன்னன்சாலமனுக்கு  தன்னிடம்இப்போதுஇருக்கும்அதிகாரம், அளவற்றசெல்வம், அறிவுயாவும்ஒருநாள்நீங்கிவிடும்என்ற ஞானம் பிறந்தது.. இதனால்அவருடையமுகத்தில்இருந்தபுன்னகைமறைந்துதுயரம்வந்தது. கொஞ்சநேரம் சிந்தனையில் இருந்த மன்னன் சாலமன் தான் அணிந்து இருந்த வைரமோதிரத்தை எடுத்துவிட்டு அமைச்சர் கொடுத்த அந்த அதிசய மோதிரத்தை அணிந்து கொண்டார்.


பழமொழியின்உட்பொருள்:


இதுவும்கடந்துபோகும்  ( THIS TOO SHALL PASS )என்றஇந்தவாக்கியத்தின்உட்பொருள்எதுவும்நிலையில்லாததுஎன்பதுதான். மனித வாழ்வில் மகிழ்வும் துயரமும் மாறி மாறி வருவன.எல்லையில்லாமகிழ்ச்சியில்இருப்பவனின்மகிழ்ச்சியும்ஒருநாள்முடிந்து போகும். துயரத்தையேநினைத்துக்கொண்டிருப்பவனின்துயரமும்ஒருநாள்முடிந்துபோகும். எனவே எல்லாமே சிலநாட்கள் மட்டுமே. 

இது ஒரு நாட்டுப்புற இலக்கியம் (Folklore) ஆகும். மக்கள் மத்தியில் சொல்லப்படும் கிராமிய நாடோடிக் கதைகளில் ஒன்று.பைபிளில் (Bible) இந்தகதை இல்லை.இந்தபழமொழியானதுதுருக்கிநாட்டுபழங்கதைகளிலும்பாடல்களிலும்அதிகமாகஇடம் பெற்றுள்ளது. அமெரிக்காவின்ஜனாதிபதியாகஇருந்தஆபிரகாம்லிங்கன்தனதுசொற்பொழிவுஒன்றில்இந்தவாக்கியத்தைமேற்கோள்  காட்டிபேசினார். அன்றுமுதல்இந்தசொற்றொடர்பிரபலமாகிவிட்டது.   

இந்த வாக்கியம் பொறிக்கப்பட்ட ஸ்டெர்லிங் சில்வர் மோதிரம் அணிந்து கொள்வதும்  நாகரிகம் (Fashion)ஆகஉள்ளது.
 





கட்டுரைஎழுதஉதவியவை:
MY THANKS TO:
https://www.google.co.in  



திருச்சி பதிவர் VGK அவர்களை சந்தித்தேன்.

$
0
0


திருச்சியிலுள்ள மூத்த வலைப்பதிவாளர் திரு வை. கோபால கிருஷ்ணன் அவர்களுடன் ஒரு ஆண்டுக்கு முன் எனக்கு வலைப்பதிவின் மூலம் தொடர்பு ஏற்பட்டது. அன்று முதல் அவரை நேரில்  பார்த்து பேச வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மேலும் அவர் தனக்கு கிடைத்த வலைப்பதிவு விருதுகளை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கும்போது  எனக்கும் தருவார். அவர் அவ்வாறு தந்த விருதுகளை ஒரு கௌரவமாகவே நான் நினைக்கிறேன். மேலும் நான் எழுதும் ஒவ்வொரு பதிவிற்கும் கருத்துக்களை தந்து உற்சாகமூட்டுவார். நானும் அவர் பதிவுகள் சென்று கருத்துரை எழுதுவேன்.

அவரும் திருச்சியில்தான் (வடக்கு ஆண்டார் தெரு) இருக்கிறார். நானும் திருச்சியில்தான் (கருணாநிதி நகர்) இருக்கிறேன். இப்படியாக நாங்கள் இருவரும் ஒரே ஊரில் இருந்தும், என்ன காரணமோ ஒரு ஆண்டு காலமாக அவரை சந்திக்க சந்தர்ப்பமே அமையவில்லை. கோப்பெருஞ்சோழன் பிராந்தையார் நட்பு போல ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே நட்பு. ஆனாலும் இணையத்தின் வழியே மின்னஞ்சல் மற்றும் வலைப்பதிவுகள் மூலமாகவே தொடர்பு இழைகள் சென்றன. இடையிடையே ஓரிருமுறைதான் செல் போனில் பேசிக் கொண்டோம்.

ஒருமுறை சென்ற ஆண்டு (2012) டிசம்பர் மாதம் VGKஅவர்கள் குடியிருக்கும் வடக்கு ஆண்டார் தெருவில் இருக்கும் எனது ஆசிரியர் ஒருவரைப் பார்க்க மாலை வேளை சென்றேன். அவர்களிடம் இவரைப் பற்றி சொன்னதும் கோபால கிருஷ்ணனா? BHEL –இல் பணிபுரிந்தவர்தானே? நன்றாகத் தெரியுமே? எங்கள் வீட்டிற்கு எதிரில்தான் முன்பு இருந்தார்கள். இப்போது புதிதாக உள்ள அபார்ட்மெண்ட்டில் இருக்கிறார்கள் என்று அவர் இருக்கும் குடியிருப்பைச் சொன்னார்கள். ஆனால் எனக்கு ஆசிரியர் வீட்டிலேயே நேரம் ஆகி விட்டபடியினால், அன்றும் VGKஅவர்களை என்னால் சந்திக்க இயலவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்னர் அவருக்கு உடல் நலமில்லை என்று அவரது பதிவு ஒன்றில் ஒருவர் எழுதிய தகவல் அறிந்து இன்று எப்படிம் சந்தித்தே ஆக வேண்டும் “ என்ற வேகத்துடன் நேற்று முன்தினம் (25.02.2013 திங்கள்) மாலை அவர் இல்லம் சென்றேன். நான் சென்ற நேரம் மின்வெட்டு நேரம், எனவே தெப்பக்குளம் கடைவீதி பக்கம் ஒரு அரைமணி நேரம் சென்றுவிட்டு மின்சாரம் வந்ததும் சென்றேன்.

சிவசக்தி டவர்ஸ்என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் அவரது “பவித்ராலயாஇருந்தது.. என்னை வரவேற்க ரொம்பவும் சந்தோஷத்துடன் கீழே வந்து கொண்டிருந்தார். அதற்குள் நானே அவரது இல்லம் சென்றுவிட்டேன். ( நான் முடிந்தவரை லிப்டில் செல்வதை தவிர்த்து விடுவேன்) அப்போதுதான் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முதன் முதலாக பார்க்கிறோம்.வீட்டின் உள்ளே இருந்த அவரது மனைவியும் என்னை அன்புடன் வரவேற்றார்கள். நான் அவரது நலனையும் குடும்பத்தார் நலனையும் விசாரித்தேன். அதன் பின்னர் நானும் VGKஅவர்களும் பொதுவாகப் பேசினோம். வறுத்த முந்திரியும் காபியும் தந்தார்கள். அப்போது அவர்கள் வீட்டிற்கு அவரது விருந்தாளிகள் வந்தனர். என்வே நானே அவரிடம் இன்னொருநாள் சந்திப்போம் என்று விடைபெற்றுக் கொண்டேன். இன்னொருநாள் சந்திக்கும் போது அவருடன் படம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

( யோவ் இதெல்லாம் யார் கேட்டது? என்று சிலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது. யார் யாரோ என்னவெல்லாமோ எழுதுகிறார்கள். அதற்கு இது தேவலாம் என்று நினைக்கிறேன். )

அவரது குடியிருப்பை விட்டு வெளியில் வந்தபோது நந்திகோயில் தெருவில் உற்சவர்களின் ஊர்வலம். அப்போது என்னிடம் கைவசம் கேமரா இல்லை. எனவே செல்போனில் படம் எடுத்துக் கொண்டேன். செல்போன் கேமராவில் படம் தெளிவாக கிடைக்கவில்லை.








ஜோதிஜி (திருப்பூர்) எழுதிய “டாலர் நகரம்” – நூல் விமர்சனம்.

$
0
0


நான்வங்கிவேலைக்குசேர்ந்தபிறகுதிருப்பூரைப்பற்றிகேள்விப்பட்டதகவல், திருப்பூரில்இந்தியாவில்உள்ளஅனைத்துவங்கிகளின்கிளைகளும்உள்ளனஎன்பதுதான். எனக்குத்தெரிந்தகிராமத்தைச்சேர்ந்தஇருவர்திருப்பூருக்குசென்றனர். ஒருவர் 15 நாளிலேயேஎன்னால்ஈரத்தில்ரொம்பநேரம்நிற்கமுடியவில்லைஎன்றுதாக்குபிடிக்கமுடியாமல்வந்துவிட்டார். இன்னொருவரால்கடினமாகஉழைக்கமுடியவில்லை. அவரும்ஓடிவந்துவிட்டார்.ஆனாலும் மற்றொருவர் (கடுமையானஉழைப்பாளி) எங்கள்கிராமத்துக்காரரோடுதிருப்பூருக்குசென்றவர், இன்றுநல்லநிலைமையில்இருக்கிறார். தனதுகடைசிதம்பிகள்இருவரையும்நன்குபடிக்கவைத்தார். கிராமத்தில்நிலங்களை  வாங்கிபோட்டார் . எனவேஎனக்குதிருப்பூரில்என்னதான்நடக்கிறதுஎன்றுதெரிந்துகொள்ளரொம்பநாளாகஆவல். அந்தகேள்விக்கு விடை சொன்ன நூல்தான்  ஜோதிஜி (திருப்பூர்) எழுதியடாலர்நகரம் என்றநூல் ..

ஆசிரியரும் திருப்பூரும்:

டாலர்நகரம்என்றஇந்நூலின்ஆசிரியர்சிறந்தவலைப்பதிவாளர். இவரைப்பற்றிவலைச்சரத்தில்நான்எழுதியவரிகள்இவை.

பதிவின்பெயர்: //  தேவியர்இல்லம்  http://deviyar-illam.blogspot.in(ஜோதிஜி)இந்த பதிவின் ஆசிரியர் ஜோதிஜி. தொழில் நகரமான திருப்பூர் பற்றிய செய்திகளை இவரது பதிவுகளில் காணலாம். மற்றும் தமிழ்,தமிழ் மக்கள்,சமுதாயம் என்ற உணர்வுடன் எழுதி வருகிறார். அடிமைகள் சரித்திரம், காரைக்குடி உணவகம் போன்ற தொடர்கள் குறிப்பிடத் தக்கவை. இவர் எழுதிய டாலர் நகரம்  என்ற கட்டுரையின் துவக்கத்தில் சொல்லப்படும்http://www.4tamilmedia.com/cont/sani-peyarchi-palan/7492-1
//. திருப்பூரில் ஒரு சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு தொழில் நிறுவனத்தின் நிர்வாகியாக உயர்ந்திருப்பவர் திருப்பூர் ஜோதிஜி. தான் சார்ந்த தொழில்துறையின் நுணுக்கங்கள் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பவர். எழுத்து, வாசிப்பு, என்பவற்றில் ஆர்வம் மிகுந்தவர். அதற்கும் மேலாக சமூகம் சார்ந்த அக்கறை மிக்கவர். இவையாவும் இணைந்ததில் பிறந்திருக்கிறது இந்த டாலர் நகரம். //  என்ற முன்னுரையே இவரது பெருமையைச் சொல்லும்.


கோவில் விசேடத்திற்கு ஊருக்கு வந்திருந்த செட்டியார் மூலம் இந்த முதல் வேலைவாய்ப்பு வந்தது. ஊரில் வாட்ச் கடை நாச்சியப்பனிடம், படித்த ஒரு பையன்தேவையென்று செட்டியார் சொல்லி வைத்திருக்க; கூட்டாளிகளுடன் சுற்றிக்கொண்டிருந்த என்னை வாட்ச் கடை நாச்சியப்பன் தான் திருப்பூருக்கு அனுப்பிவைத்தார். பள்ளித்தோழன் மாதவன் செலவுக்கு பணங்கொடுத்து வழியனுப்பதிருப்பூருக்கு வந்து சேர்ந்தேன்.- என்று தொடங்கி தான் மஞ்சள் பையோடு திருப்பூரில் தொடங்கிய வாழ்க்கை அனுபவத்தினை விளக்குகிறார். -  (பக்கம்.27.)

திருப்பூரிலுள்ளஎந்தநிறுவனங்களையையும்நம்பமுடியாது. உள்ளேபணிபுரிபவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும்தங்களின்அடுத்தநாள்எப்படியிருக்கும்? என்பதேயூகிக்கமுடியாது. இன்றுநிறுவனத்திற்குலாபமாகவந்தபத்துலட்சம், நாளைபத்துகோடிநட்டத்தில்சிக்கவைத்துவிடும். ஏற்றுமதிநிறுவனங்கள்வளரஉழைப்பு, தரம், நிர்வாகத்திறமைவேண்டும். ஆனால்இவைஎல்லாவற்றுக்கும்மேலேஅதிர்ஷடம்., நம்பகடினமாகஇருக்கும், ஆனால்இதுதான்உண்மை. மாமனாரும்சகலையும்என்னைப்பார்த்துவிட்டுசென்றபோதுமற்றொருநிறுவனத்தில்உள்ளேநுழையமுயற்சித்துக்கொண்டிருந்தேன்.” என்று தான் கூடு விட்டு கூடு பாய காரணம் என்ன என்பதனை விளக்குகிறார். -(பக்கம்.65)

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறி மாறி உழைத்த அவர், 15 ஆண்டுகளாகபோராடிக்கொண்டிருந்தசொந்ததொழில், சொந்தநிறுவனம்என்றஎண்ணம்இயல்பாகஎன்னைத்தேடிவந்தபோதுசரியாகபயன்படுத்திக்கொண்டேன். வாழ்வின்அடுத்தமறுமலர்ச்சிஅத்தியாயங்கள்உருவாகத்தொடங்கியது“ என்று சொல்கிறார். -(பக்கம் 111) அப்போது தனக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட அனுபவங்களை சுவைபட சொல்லிச் செல்கிறார். அவருடைய ஒவ்வொரு அனுபவமும் திருப்பூரில் வேலைதேடி செல்வோருக்கும் தொழில்முனைவோருக்கும், கலங்கரை விள்க்கங்களாக உள்ளன.

திருப்பூரில் ஆடை தயாரிப்பு:


திருப்பூரில்தயாரிக்கப்படும்ஆடைகள்எவ்விதம்உருவாகின்றன,  சாயப்பட்டறையில்ஏற்றப்படும்சாயங்கள் ,தயாரிக்கப்பயன்படுத்தும்எந்திரங்கள்பெயர்என்பதுஉட்படஅலுப்புதட்டாதவகையில்எழுதுகிறார்.
 உருவாகும்ஒவ்வொருஆடைக்கும்ஒவ்வொருசூத்திரம். அத்தனையும்பயன்படுத்தும்நூலில்தான்தொடக்கம்பெறுகிறது. நீங்கள்போடும்ஜட்டி, போர்வைபோலகடினமாகஇருந்தால்உங்கள்உறுப்புகளைஉண்டுஇல்லைஎன்றுபடுத்திஎடுத்திவிடாதா? குளிர்காலத்தில்போடக்கூடியஆடைகள்உள்உறுப்புகள்தெரியும்அளவிற்குஇருந்தால்எப்படியிருக்கும்? குளிர்நடுங்கவைத்துவிடாதா? -  (பக்கம் 144)

நீங்கள்உடுத்தும்சிலஆடைகளில்ஜட்டியின்துணிஒருவிதமாகவும்பனியனிதுணிவேறுவிதமாகவும்இருப்பதைபார்த்திருப்பீர்கள்தானே? சிலதுணிகளில்உள்ளேகடினமாகசொரசொரப்பாகஇருக்கும். அதேதுணியின்வெளிப்புறம்முயலைதடவிப்பார்க்கும்சுகம்தெரியும். அத்தனையும்நிட்டிங்எந்திரத்தின்மூளைப்பகுதியில்செய்யப்படும்ஜாலவித்தையாகும்.” -   (பக்கம் 154)


திருப்பூர் சாய பட்டறைகள்:

திருப்பூர்என்றாலேசாயப்பட்டறைகள்நினைவுக்குவராமல்போகாது. அந்தஅளவுக்குஇப்போதுசெய்தித்தாள்களில்ஊடகங்களில்சாயப்பட்டறைபற்றியதகவல்கள்வருகின்றன. சாயமேஇதுபொய்யடா (அத்தியாயம் 22), சாயப்பட்டறைகளைமூடு(அத்தியாயம் 24)என்ற தலைப்புகளில் இவைகளைக் காணலாம்.

 இந்தசாயப்பட்டறைமற்றும்சலவைப்பட்டறைகளில்பணிபுரியும்90 சதவிகிததொழிலாளிகள்தஞ்சாவூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம், மதுரை சிவகங்கை,கம்பம்,தேனி,போடி,சுற்றுவட்டாரபகுதியில்இருந்தவந்த16 முதல் 40 வயதுவரைக்கும்உள்ளநல்லஉடல்வலிமை வாய்ந்த  இளைஞர்கள்.. படிப்பைபாதியில்விட்டுஓடிவந்தவர்கள்முதல்,  வாழ்க்கையைவாழ்ந்தாகிவிடவேண்டியகட்டாயத்தில்இருப்பவர்கள்வரையுள்ளஅத்தனைபேரையும்  இந்தத்  தொழிலில்பார்க்கலாம். “ - (பக்கம் 199)

மேலும் இந்த சாயக்கழிவுநீரால் ஒரத்துப் பாளையம் அணை, விவசாயம், குடிநீர் ஆகியவற்றில் ஏற்பட்ட பாதிப்புகளையும் அதனை நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் அதில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றியும் சொல்கிறார்.

திருப்பூர் நிறுவனதாரர்கள்:

திருப்பூர் இந்த அளவுக்கு ஒரு தொழில் நகரமாக உருவாக அங்கு முதல் போட்ட நிறுவனதாரர்களின் பங்கு முக்கியமானது. இந்த நூலின் ஆசிரியர் ஜோதிஜி அவர்கள், இந்த தொழில் ஈடுபட்ட நிறுவனதாரர்கள் எனப்படும் முதலாளிகளைப் பற்றியும் அவர்கள் செய்த, ஏற்றுமதி இறக்குமதி தொழில் திருப்பூரில் பெற்ற வளர்ச்சியைப் பற்றியும் எடுத்துக் காட்டுகளோடு விளக்குகிறார். அதேசமயம் இறக்குமதியாளரிடம் தான் பேசியபடி போட்ட  ஒப்பந்தத்தை நிறைவேற்றாததால் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களை இழந்தவர்கள், காமத்தால் தொழிலை சொத்துக்களை அழித்தவர்கள்,  என்றும்  உதாரணம் காட்டுகிறார்.

 உலகமயமாக்கல்தத்துவத்தில்இறக்குமதியாளரின்சட்டங்கள்ஒவ்வொன்றாய்திருப்பூருக்குஉள்ளேவர,நிறுவனமுதலாளிகள்தங்களின்வாலைச்சுருட்டிக்கொள்வதைதவிரவேறொன்றும்செய்யமுடியவில்லை . நிறுவனங்களின்உள்ளேபணிபுரிபவர்களின்வயதுகணக்கெடுக்கப்பட்டது. தொழிலாளிகளின்அடிப்படைவாழ்வாதாரவசதிகள்சோதிக்கப்பட்டது. சோதித்தமுடிவுசாதகம்என்றால்ஒப்பந்தம். இல்லையென்றால்நிறுவனங்களுக்குப்பாதகம்.. நிறுவனத்தின்கழிப்பறைசுத்தம்முதல்பணியாளர்வசதிவரைகண்கொத்திப்பாம்பாய்இறக்குமதியாளர்கள்கவனிக்கும்போதுமுதலாளிகளால்என்னசெய்துவிடமுடியும்? இன்றையநவீனவசதியில்நேரடிஒலிஒளிகாட்சியாய்ஏதோஒருமூலையில்உட்கார்ந்துகொண்டுதிருப்பூரில்உள்ளநிறுவனத்தின்மொத்தநிர்வாகத்தையும்தனக்குள்வைத்துக்கொள்ளும்இறக்குமதியாளர்களும்உண்டு.– (பக்கம்91 – 92 )

இறக்குமதியாளர்களின் வெளிப்படையான ஒப்பந்தம் குறித்து.... ...
நான்இப்படித்தான். இதுதான்எனக்குவேண்டும். உனக்குஎன்னதேவை? அப்படியா? இதுதான்என்னால்முடியும்? உனக்குவாய்ப்புஇருக்காஇல்லையா? சரிஇதைவைத்துக்கொள்? இதுதான்இதற்கானசட்டதிட்டம். மாறாதே........ நீமாறினால்நானும்வேறுபக்கம்மாற்றிக்கொள்வேன். எளிமையானசட்டதிட்டம். அதற்குநீங்கள்சுயநலம், பொதுநலம்போன்றஎத்தனைபெயர்களைவைத்துக்கொண்டாலும்அவர்கள்கவலைப்படுவதுஇல்லை. - (பக்கம் 162)”
மேலும் ஏற்றுமதி இறக்குமதியில் விளையாடும் அரசியல் பற்றியும் கோடிட்டு காட்டுகிறார்.

திருப்பூர் தொழிலாளர்கள்:

திருப்பூர் என்றாலே உழைப்பு என்று அழைப்பு தருகிறார்.


தூங்கா நகரம், கோவில் நகரம், ன்ற பெயர்கள் மதுரைக்கு இருப்பது போலவேதிருப்பூரும் நிட் சிட்டி, டாலர் சிட்டி, பின்னாலாடை நகர், பனியன் நகரம்எனப்பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆயத்த ஆடைகளின் (HOSIERY GARMENTS) உற்பத்தியை நம்பி மட்டுமே இந்தநகர் இயங்கிக்கொண்டிருக்கிறது.வெளிநாட்டுக்கு ஏற்றுமதி அல்லது உள்நாட்டுக்கு தேவைப்படும் ஆடைகள் என்று இரண்டு விதங்களில் இங்குள்ளவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” –  (பக்கம் 112 )

.  ”. தினந்தோறும்எட்டுமணிநேரம்தான்என்னால்உழைக்கமுடியும்? என்பவர்கள்இந்தஊர்ப்பக்கம்எட்டிப்பார்க்காமல்இருப்பதுநல்லது.  தினந்தோறும்16 மணிநேரஉழைப்புஎன்பதுஇங்குசர்வசாதாரணம். ( பக்கம் 113 )

புதுக்கோட்டை பக்கம் ஆலங்குடி அருகே உள்ள ஒரு கிராமம்தான் கருணாகரனுக்கு சொந்த ஊர். படிப்பு வரவில்லை என்று திருப்பூருக்கு வந்த அவன் ஆரம்பத்தில் செய்த வேலை தினக் கூலிக்கு காஜா பட்டன் அடிப்பது. அவன் தனது உழைப்பால் முன்னேறி பெரிய ஆளாகிய கதையை எடுத்துக் காட்டுகிறார்.


பணம்துரத்திப்பறவைகள்( அத்தியாயம்– 20) என்றதலைப்பில்திருப்பூர்தொழிலாளர்களதுநிலையக்காட்டுகிறார். அதில்ஆண்தொழிலாளர்களைமட்டுமன்றிபெண்தொழிலாளர்களைப்பற்றியவிவரங்களையும்வெளிப்படையாகவேபேசுகிறார்.

பெண்களின்பணிநேரமென்பது, தினமும்காலைஎட்டுமணிக்குள்நிறுவனத்திற்குள்இருக்கவேண்டும். காலைஐந்துமணிக்குள்சமையல்செய்தாகவேண்டும். இதற்கிடையேபெண்களின்மற்றொருவேலையில்கவனம்வைத்தாகவேண்டும். தங்கள்குழந்தைகளைபள்ளிக்குஅனுப்பவேண்டும். அவசரமாய்டப்பாவில்காலைக்கும்மதியத்திற்கும்சேர்த்துஉணவைஅடைத்துக்கொண்டு எடுத்துச் செல்லவேண்டும். இரவுஒருமணிவரைக்கும்வேலையென்றால்நிறுவனங்களுக்கருகேகிடைக்கும்இரண்டுபுரோட்டாக்கள்தான்உணவாகயிருக்கும்.ள்ளிரவு வேலைமுடித்துவந்தாலும்,  மறுநாள்காலை, எப்போதும்போல, காலைஐந்துமணிக்குஎழுந்துதங்கள்கடமைகளைச்செய்யவேண்டும். இல்லாவிட்டால்காலைஎட்டுமணிவேலைக்குசெல்லமுடியாது. இரவுஎத்தனைமணிக்குவேலைமுடிகின்றது? என்பதுமுக்கியமல்ல. மறுநாள்காலைஎட்டுமணிக்குநுழைவதுதான்முக்கியமாகஇருக்கும். அரைமணிநேரம்தாமதம்என்றாலும்உள்ளேஅனுமதிக்கமாட்டார்கள்.“ (பக்கம்183  184)

மேலும் தொழிலாளர்களது குடியிருப்புகள், அங்கும் வேலை பார்க்கும் இடங்களிலும்  நடக்கும்பாலியல்குற்றங்கள், கட்டைபஞ்சாயத்துக்கள்குறித்தும்அத்தியாயம் 21 இல்” காமம் கடத்த ஆட்கள் தேவை”என்றதலைப்பில்பேசுகிறார்.
.
திருப்பூர் இடைத் தரகர்கள்:

இப்போது எல்லாமட்டத்திலுமே இடைத்தரகர்கள்ஊடுருவிவிட்டார்கள். மந்திரிபதவிவாங்கித் தருவதற்கு கூடஆட்கள்இருக்கிறார்கள். திருப்பூர்மட்டும்இதற்கு விதிவிலக்கா? என்ன?
நிறுவனதாரர்களும்தொழிலாளிகளும்உழைத்துஉருவாக்கும்திருப்பூரில்எல்லாவற்றிற்கும்இடைத்த்ரகர்களேமுன்வந்துநிற்கிறார்கள். “ தரகர்கள்எனும்தரமற்றகூட்டம்( அத்தியாயம் 4.)“ என்ற தலைப்பில் இடைத் தரகர்களின் மோசடித்தனங்களை சொல்லுகிறார்.

திருப்பூரில் வேலை வாய்ப்பு, மார்க்கெட்டிங்:

திருப்பூர்செல்லும்அனைவருக்கும்வேலைகிடைத்துவிடுமா? இந்தவேலைவாய்ப்பைவைத்துநடக்கும்மோசடிகள்குறித்தும்அலசுகிறார்.” வேலை காலி இருக்குஎன்றபக்கங்களைப்படியுங்கள். அத்தியாயம்– 18   இல்சந்தைக்குபோகலாம்வாரீங்களா?என்றுமார்க்கெட்டிங்முறைகளைப்பற்றிவிவரிக்கிறார்.மார்க்கெட்டிங் பற்றி ஆராயும் மாணவர்களுக்கு தேவையான குறிப்புகள்.


முடிவுரை:

ஆசிரியர் ஜோதிஜி (திருப்பூர்) அவர்கள் எழுதியடாலர்நகரம் என்றநூல்அனைவருக்கும்பயன்படக்கூடியது. எனவேஇந்நூலை  ஆங்கிலம்,ஹிந்திபோன்றபிறமொழிகளிலும்மொழிபெயர்க்கவேண்டும். ஒரு ஆராய்ச்சி நூல் போல பல விவரங்கள் அடங்கிய இந்தநூலுக்காகவேஆசிரியருக்குமுனைவர்பட்டம்தரலாம்.

நூல்வெளியீடு: 4தமிழ்மீடியாபடைப்பாய்வகம்
நூலின்விலைரூ 190/= பக்கம் 248  

தேவை: பயோகேஸ் சிலிண்டர்கள்

$
0
0


பதிவுபண்ணிபதினைந்துநாளாச்சு. இன்னும்கேஸ்சிலிண்டர்வரவில்லை!”
சமையல்எரிவாயுவிலைஇன்னும்உயரும்
இனிகேஸ்சிலிண்டருக்குமானியம்கிடையாது
மானியவிலையில்கிடைக்கும்சிலிண்டர்களின்எண்ணிக்கைகுறைப்பு



இப்படியாகநாம்சமையலுக்குபயன்படுத்தும்கேஸ்பற்றியசெய்திகளைபத்திரிகைகளிலும், தொலைகாட்சிகளிலும், மக்கள் மத்தியிலும்  
பேசப்படுவதைபார்க்கலாம்.







சமையலுக்குவிறகுஅடுப்பு, கெரசின் ஸ்டவ்எனப்படும்மண்ணென்ணெய்அடுப்பு, கரிஅடுப்பு, கேஸ்ஸ்டவ், மின்சாரஸ்டவ் ( INDUCTION STOVE),  என்றுகாலம்தோறும்மனிதன்தனதுதேவைக்கேற்பபயன்படுத்திவருகிறான். மின்சார  ஸ்டவ்வை  ( INDUCTION STOVEமின்வெட்டின்காரணமாக  தேவையானநேரத்திற்குபயன்படுத்தஇயலவில்லை.  

 
இப்போதுஇந்தியாவில்மக்களிடையேஅதிகபயன்பாட்டில்இருப்பதுஇயற்கைஎரிவாயுஎனப்படும்LPG GAS  ( Liquefied petroleum gas)  - தான். இப்போதுவாகனங்களைஇயக்கவும்இந்தகேஸ்பயன்படுகிறது. இதனாலும்நாளுக்குநாள்தேவைஅதிகரித்துவருவதாலும்தட்டுப்பாடுஅதிகம். ரேஷன்முறையிலும்ஏகப்பட்டதில்லுமுல்லுவேலைகள். சட்ட விதிகளை மீறி வீட்டுஉபயோகத்திற்கானLPG கேஸ்சிலிண்டர்கள்ஓட்டல்கள், வாகனங்களுக்குதிருட்டுத்தனமாகவிற்கப்படுகின்றன.

எனவேஇந்தஇயற்கைஎரிவாயு (NATURAL GAS)   முறையிலிருந்துமாறி, உயிரிவாயு (BIO GAS)முறைக்குநாடுமாறவேண்டும். இரண்டுவிதமானமுறையும்இருந்தால்எரிவாயுதட்டுப்பாடின்றிஇருக்கும். ஏற்கனவேநமதுநாட்டில்உயிரிவாயு (BIO GAS) பயன்பாடுஇங்கும்அங்குமாய்இருந்துவருகிறது. இதுபற்றியசெய்திகள்தமிழ்நாட்டுபத்திரிகைகளிலும்வந்துள்ளன. கன்னியாகுமரிவிவேகானந்தாகேந்திராலாயாவின்சக்திசுரபி“, - திருச்சிஜமால்முகமதுகல்லூரியில்அவர்களதுசொந்தஉபயோகத்திற்கெனஏற்படுத்திக்கொண்ட (பெரியஅளவிலான) பயோகேஸ்யூனிட், -  கோயம்புத்தூர், சாய்பாபாகாலனியில்பிரபுஎன்பவரின்வீட்டில்அவரதுசொந்தஉபகோகத்திற்கெனஉற்பத்திசெய்யப்படும்பயோகேஸ், - கடலூர்பிள்ளையார்குப்பத்தில்மக்கள்தங்களுக்காகதயாரித்துக்கொள்ளும்பயோகேஸ்பயனபாடுபரங்கிப்பேட்டையில்பயோகேஸ்யூனிட் - என்றுசெய்திகள்வந்துள்ளன. இவை பயோகேஸ்பயன்பாட்டிற்குமக்களிடம்இருக்கும்வரவேற்பைஉணர்த்தும்.



 

ஆனாலும், இதற்கானஉபகரணங்கள்இடத்தைஅடைத்துக்கொள்வதாலும்பாதுகாப்புகாரணங்களினாலும்இன்னும்அதிகபயன்பாட்டிற்குவரவில்லை.எனவேஇந்தஉயிரிவாயு (BIO GAS) திட்டத்தைபெரியஅளவில்தொடங்கி, கிடைக்கும்எரிவாயுவைஇப்போதுள்ளகேஸ்சிலிண்டர்களில்அடைத்துவிற்பனைசெய்யலாம். மேலும்இதற்குஅரசுமானியம்உண்டுஎன்பதால்அரசாங்கம்மட்டுமின்றிதனியார்நிறுவனங்களையும்  அனுமதிக்கலாம். உயிரிவாயு (BIO GAS) சிலிண்டர்களுக்குபச்சைவண்ணம்பூசிதனியேவித்தியாசப்படுத்தலாம். அல்லது  மேலேஉள்ளபடத்தில்ள்ளதுபோன்றPORTABLE BIOGAS சிலிண்டர்களையும்தயார்செய்துசந்தைப்படுத்தலாம். இதனால்இப்போதையகேஸ்தட்டுப்பாடுநீங்கும். தொழில்முனைவோர்களுக்குஒருநல்லவாய்ப்பாகவும்இருக்கும். இதனால்பலருக்குவேலைவாய்ப்பும்  அமையும்.

கடுமையானமின்வெட்டுகாரணமாகசூரியசக்தியை (SOLAR ENERGY) மாற்றுசக்தியாகமக்கள்உணரஆரம்பித்துவிட்டனர். இந்தியாசுதந்திரம்அடைந்தஇத்தனைஆண்டுகளில்தமிழ்நாட்டில்யாரும்எடுக்காதஒருதுணிச்சலானகாரியத்தைதமிழகமுதல்வர்ஜெயலலிதாஅவர்கள்செய்துஇருக்கிறார்கள். ஒருதொலைநோக்குதிட்டத்தோடு தமிழ்நாடுசூரியசக்திகொள்கை2012” ( Tamil Nadu Solar Energy Policy 2012 )என்றஆவணத்தை சென்றஆண்டு, 20.10.2012 அன்று தலைமைச்செயலகத்தில்வெளியிட்டார். இப்போதுஎங்குபார்த்தாலும்சூரியசக்தி (SOLAR ENERGY) தேவைப்படுவோர்அணுகவேண்டியவிளம்பரங்கள்வந்துகொண்டிருக்கின்றன. இந்தமாற்றத்திற்குகாரணமானகொள்கைஅறிவிப்பைத்தந்த, தமிழகமுதல்வர்ஜெயலலிதாவிற்குபாராட்டுக்கள். இதைப்போலவேஉயிரிவாயு (BIO GAS) திட்டத்தினையும்தமிழ்நாடுஅரசு தீவிரமாகசெயல்படுத்தவேண்டும். LPG சிலிண்டர்கள் போன்று
உயிரிவாயு (BIO GAS)சிலிண்டர்களும் மக்கள் மத்தியில் பயன்பாட்டுக்கு வரவேண்டும்.

சீனாவிலிருந்துமலிவுவிலைசைக்கிள்கள்இறகுமதிசெய்யமுயற்சிநடந்தபோது, இங்கிருக்கும்உள்ளூர்உற்பத்தியாளர்கள்சுதேசிவிதேசிஎன்றுதடைசெய்தார்கள். அதேபோல்பெட்ரோல், டீசலுக்குமாற்றுஎரிபொருள்கண்டுபிடிக்கபலதடைகள். இந்தஉயிரிவாயு (BIO GAS) திட்டத்தினைசெயல்படுத்தவிடாமல்தடுக்கவும்உள்குத்துஅரசியல்நம்நாட்டில்நடக்கும். இருந்தாலும்நாட்டுமக்கள்நலன்கருதி -  நாட்டிற்குஇப்போதுதேவை: பயோகேஸ்சிலிண்டர்கள்

ஊதுகிறசங்கைஊதிவைப்போம். நல்லதுநடந்தால்சரி!



( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )
 



கண் ஆபரேஷன் கட்டணம்

$
0
0


.என்னவென்று தெரியவில்லை. கண்களில் ஒரே கூச்சம். கண்களிலிருந்து அடிக்கடி தண்ணீர் வந்தது.. அப்போதுதான்நேஷனல் கல்லூரியில் முதுகலைப் படிப்பில் சேர்ந்து இருந்தேன் பெரும்பாலும் கல்லூரி கட்டடங்களின் வெளிப்புறம் வெளிர் மஞ்சள் நிறம்தான். வகுப்பறையில் உட்கார்ந்து இருக்கும்போது ஜன்னல் வழியே பார்க்கும்போது, வெளியில் எதிர்ப்புறம் உள்ள கட்டடங்களில் வெயில் பட்டு கண்ணை கூசச் செய்யும். வழக்கம் போல கண்களிலிருந்து தண்ணீர். வேறு வழியில்லை. கண் மருத்துவமனை சென்று மருத்துவரைப் பார்த்தேன். அவர் கண்ணாடி போடச் சொன்னார். சில மருந்தும் எழுதிக் கொடுத்தார். கொஞசநாள்தான். கண்களில் தொந்தரவு இல்லை. அப்புறம் கண்ணாடி எதுவும் அணிவதில்லை.

வங்கி வேலையில் சேர்ந்து 25 ஆண்டுகள் வரையிலும் எனக்கு கண்ணாடி தேவைப் படவில்லை. அதன்பிறகு கண்களில் எல்லோருக்கும் ஏற்படும் குறைபாடு வந்தது. பொடி எழுத்துக்களை படிக்க இயலவில்லை. காரணம் வங்கிப் பணிகளில் கம்ப்யூட்டர் பணி. எப்போதும் பார்க்கும் கண் மருத்துவமனை சென்று பார்த்தேன். மருத்துவர் படிப்பதற்கென்று ஒரு கண்ணாடி போடச் சொன்னார். படிக்கும் சமயம் மற்றும் வங்கிப் பணி செய்யும்போது மட்டும் போட்டுக் கொண்டேன். அப்புறம் தொலைவில் இருக்கும் பொருட்களைப் பார்க்கவும் படிப்பதற்கும் இரண்டு லென்சுகள் உள்ள கண்ணாடி போட நேர்ந்தது. பெரும்பாலும் இரு சக்கர வண்டியில் செல்லும்போது, பகலில் மட்டும் அணிந்து கொண்டேன்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் மாலை நேரங்களில் யாரையும் எதனையும் தெளிவாகக் காணமுடியவில்லை. எனவே எப்போதும் பார்க்கும் கண் மருத்துவ மனைக்கு சென்றேன். கண்ணில் புரை இருப்பதாகவும், ஆபரேஷன் செய்தால் சரியாகிவிடும் என்றார்கள். முதலில் ஒரு கண். சிலநாள் சென்றதும் இன்னொரு கண் ஆபரேசன் செய்யலாம் என்று முடிவு செய்தேன்.அப்போது பணியில் இருந்தேன். எனது நேரம் அப்போது பெரம்பலூர் மாவட்டத்தில் இலவச கண் பரிசோதனை முகாமில், அறுவை சிகிச்சை செய்தவர்கள் பலருக்கு கண் பார்வை போனதாக செய்தி வந்தது.. எனவே பயந்து போய் நான் கண் ஆபரேஷன் யாரிடமும் செய்யாமல் தவிர்த்தேன். கொஞ்சநாள் கழித்து வேறு ஒரு கண் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்தேன். அவர்கள் ஆபரேஷன் மற்றும் லென்ஸ் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு கண்ணிற்கு ரூ 28000 ஆகும் என்றார்கள். ஆக இரண்டு கண்ணிற்கும் ரூ 56000 ஆகும். இதற்கிடையில் எனது உறவினர் ஒருவர் பத்தாயிரம் மட்டுமே செலவானதாகச் சொன்னார். எனது பெரியம்மா மகன் ஒருவர் (வேறு மாவட்டத்துக்காரர்) தனக்கும் உறவினர்களுக்கும் அரசு கண் மருத்துவ மனையிலேயே செலவில்லாமல் ஆபரேஷன் செய்து கொண்டதாகவும் இப்போது எல்லோருக்கும் பார்வை நன்றாக இருப்பதாகவும் சொன்னார். மேலும் எந்த மருத்துவ மனையானாலும் கண்ணிற்கு அவர்கள் பொருத்துவது இந்தியன் லென்ஸ் (ரூ500) அல்லது அமெரிக்கன் லென்ஸ் ( ரூ1000) என்றும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் கண் ஆபரேஷனுக்கு என்று அவர்கள் வாங்கும் (நிர்வாகச் செலவுகள்) தொகைதான் அதிகம். என்றும் சொன்னார். (இது அப்போதைய கணக்கு) எனக்குத் தெரிந்த ஆப்டிகல்ஸ் (OPTICALS)கடைக்காரரும் பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு ஆம் என்று தயக்கத்துடன் இந்த உண்மையை ஒத்துக் கொண்டார்.

எதற்கும் எனது கண்களை இன்னொரு டாக்டரிடம் காட்டினால் ந்ல்லது என்று எனக்கு தோன்றியது. எனவே நான் என் பெரியம்மா மகன்  சொன்ன மருத்துவரிடம் (தனியார், பக்கத்து மாவட்டம்) சென்று கண்களைப் பரிசோதனை செய்து கொண்டேன். அவர் எனது கண்களில் ஆபரேஷன் செய்யும் அளவுக்கு கண்களில் கோளாறு இல்லையென்றும் எப்போதும் போல இப்போது அணியும் கண்ணாடியையே போட்டுக் கொண்டால் போதும் என்றும் சொல்லி விட்டார். அன்றிலிருந்து இன்றுவரை பகல் இரவு எதுவானாலும் தேவைப்படும் சமயங்களில் மட்டும் கண்ணாடி அணிந்து கொள்கிறேன். கடந்த ஐந்து வருடமாக ஆபரேஷன் எதுவும் இல்லை. இருந்தாலும் மறுபடியும் தொந்தரவு. இப்போது ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யப் போகிறேன். வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் வந்ததால் எங்கள் வங்கியில் CLAIM  எதுவும் செய்ய முடியாது.  கண்ணில் ஆபரேஷன் தேவைதான் என்றால் செய்து கொள்ள வேண்டியதுதான்.


( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” ) 



விடை பெற்றுக் கொள்கின்றேன்

$
0
0



ஐந்தாண்டிற்கும்மேலாகவலைப்பதிவினில்
வலையவந்துவிட்டேன்!  
ஓராண்டிற்கும்மேலாகவலைப்பதிவினில்
எழுதியும்வந்துவிட்டேன்! இன்னும்
எனதுபயணம்நிற்கவில்லை!

அப்படிஇப்படிஎன்றேசமாளித்தாலும்
கண்ணில்ஒருகுறைஎன்பதால்
என்னசெய்யமுடியும்?

இடைக்காலஓய்வாகசெல்கின்றேன்!
ஒருசின்னஇடைவெளிமட்டுமே!
யாரிடமிருந்தும்நான்பிரியவில்லை!
எனதுஎண்ணங்கள்இவ்விடமே!

விடைபெற்றுக்கொள்கின்றேன்
நண்பர்களே! தற்காலிகமாக!
மீண்டுவருவேன்!
மீண்டும்சந்திப்போம்!




  ( Second Picture Thanks to http://blogs.trb.com )

                       இதுவும் கடந்து போகும் ( THIS TOO SHALL PASS )
 










வீட்டு நிலையின்மேல் கீதோபதேசம் படம் வைக்கலாமா?

$
0
0


எங்கள் வீட்டுக்கு வந்த நெருங்கிய உறவினர் ஒருவர் (அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருபவர்தான்) சென்றமுறை வந்து சென்றபின் செல்போனில் சொன்ன கருத்து இது. “ நீங்கள் உங்கள் வீட்டு நிலைப்படியில், மகாபாரதத்தில் போர்க்களத்தில் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்யும் காட்சியை வைத்து இருக்கிறீர்கள். இதுமாதிரி படங்களை வீட்டில் வைக்க மாட்டார்கள். அதனால்தான் உங்களுக்கு சில கஷ்டங்கள் வருகின்றன. எனவே அதனை எடுத்துவிட்டு  வேறு படத்தை வையுங்கள்  என்பதுதான். அதற்குக் காரணம் அப்போது எனக்கு ஏற்பட்ட சில பிரச்சினைகள்தான். அந்த உறவினர் ஒவ்வொன்றுக்கும் நாள், நட்சத்திரம், சகுனம் என்று எதற்கெடுத்தாலும்  ஜோதிடர்களிடம் அடிக்கடி செல்பவர். எனக்கு இதுமாதிரி விஷயங்களில் அதிகம் ஈடுபாடு கிடையாது. எனவே அவர் சொன்னபடி நான் எதுவும் செய்யவில்லை. மேலும் நாங்கள் வீடு கட்டத் தொடங்கி வைத்த முதல் நிலை அது.

எங்கள்வீட்டுநிலைப்படியில்கீதாஉபதேசம்வந்தகதை:


  நான் படித்த திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளியில் எங்களுக்கு அப்போது தலைமை ஆசிரியராக இருந்த பூவராக அய்யங்கார் அவர்கள் எங்கள் வகுப்பிற்கு வந்தபோது, ஒரு மாணவனிடம் மகாபாரதத்தைப் பற்றி ஒரு கேள்வி கேட்டார். அவனுக்கு மட்டுமல்ல அங்குள்ள யாருக்குமே பதில் சொல்லத் தெரியவில்லை. உடனே அவர் பள்ளிக்கூடம் விட்டதும் மாணவர்களுக்கு மாலையில் மகாபாரதம் சொல்ல வேண்டும் என்று பள்ளியில் பணியாற்றிய தமிழ் ஆசிரியர் ஒருவரை ஏற்பாடு செய்தார். அந்த தமிழாசிரியர் சமஸ்கிருத புலமை உடையவர். வடகலை அய்யங்கார். அவரும் தினமும் வகுப்புகள் முடிந்ததும் மாலையில் அனைத்துவகுப்பு மாணவர்களுக்கும் மகாபாரதக் கதையை இடையிடையே சமஸ்கிருத சுலோகங்களோடு சுவாரஸ்யமாய் சொன்னார். விடுமுறை நாட்கள் தவிர இரண்டு வாரம் தொடர்ந்து சொல்லப்பட்டது. நான் கதை கேட்கும் ஆர்வத்தில் தவறாமல் எல்லா நாட்களும் சென்று வந்தேன். அன்றிலிருந்து எனக்கு மகாபாரதக் கதையில் ஈடுபாடு ஏற்பட்டது.

போர்க்களத்தில் எதிரிகளாக எதிரில் நிற்கும் உறவினர்களை நினைத்து அர்ச்சுனன் போர்புரிய விரும்பாது,வில்லையும் அம்பையும் அம்பறாத்துணியையும் கீழே வைத்துவிடுகிறான்.  அப்போது கிருஷ்ணன் தர்மம், யுத்தம் என்று வந்து விட்டால், எதிரில் நிற்பவன் உறவினன்,ஆசிரியன் என்று பார்க்கக் கூடாது. கடமையைச் செய். “என்று அர்ச்சுனனுக்கு உபதேசம் சொன்ன காட்சி எனது மனதில் பதிந்து விட்டது. அதன் பிறகு கல்லுரி நாட்களில் ராஜாஜி எழுதிய மகாபாரதம், அ.லெ. நடராஜன் மொழிபெயர்த்த மகாபாரதம் ( நான்கு பாகங்கள்) படித்தேன். என்னைப் பொருத்தவரை மகாபாரதம் என்பது அனைவரும் படிக்க வேண்டிய ஒரு இதிகாசம். குறிப்பிட்ட ஒரு மதத்திற்குமட்டும் சொந்தமானதாக நினைக்கக் கூடாது. அதில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு கருத்தை உணர்த்துவன.  மகாபாரதத்தில் பல கிளைக் கதைகளும் நீதிக் கருத்துக்களும் உள்ளன. பக்தி உணர்வோடு படிப்பவர்கள் அல்லது ஒரு இதிகாசம்(MYTHOLOGY) என்ற முறையில் படிப்பவர்கள் என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். விமர்சனம் எதில்தான் இல்லை?

வங்கிப்பணியில்சேர்ந்து சில ஆண்டுகள் கழிந்து, வீடுகட்டத்தொடங்கியவுடன்நிலைவைக்கும்நேரம்அது. நிலைக்குமேல்வைக்கும்கார்விங்( CARVING) எதைவைப்பதுஎன்பதனைதேர்வுசெய்வதற்காகநானும் கட்டட ஆசாரியும்ஒருதொழிற்கூடம்சென்றோம். அஙுகுதாமரை , கஜலட்சுமி, ராஜலட்சுமி, சூரியன்என்று பலகார்விங்பணிகளைக்காட்டினார்கள். அப்போதுஅதில்ஒன்று மாணவப்பருவத்தில்எனது மனதில் பதிந்த  கீதாஉபதேசம்”. அங்கிருப்பவர்களிடம் இதைவீட்டில்வைக்கலாமா? என்றுகேட்டேன். தாராளமாகவைக்கலாம். அதனால்தான்கார்விங்செய்து விற்பனைக்கு  வைத்துள்ளோம்என்றார்கள். எங்கள் கட்டட  ஆசாரிஅவர்களும் வைக்கலாம் என்றார். மேலும் பல பிரபலஓட்டல்களில், காசாளர் ( CASHIER)இருக்கும் இடத்தில் இந்த படத்தை பார்த்துள்ளேன். எனவே அந்த கீதாஉபதேசம்கார்விங் பலகைக்கு ஆர்டர் கொடுத்தேன்.  இவ்வாறாகஎங்கள்வீட்டுநிலைப்படியில்கீதாஉபதேசம்காட்சிவந்தது

 இந்த வீட்டிற்கு வந்த பிறகு எனக்கும் எனது மனைவிக்கும் (மத்திய அரசு ஊழியர்) பதவி உயர்வு வந்தது. எனது மகள் எம்.எஸ்சி முடித்து வங்கிப் பணிக்கு சென்றார்; அவருக்கு. திருமணமும் நடைபெற்றது. அடுத்தவர்களுக்கு உதவும் வகையில் சேமிப்பும் இருந்தது. மகனும் கல்லூரிக்கு சென்று வருகிறார்.

யார்மனதில்தான்கவலைஇல்லை?

வாஸ்து என்றபெயரில்சிலர்ஏதேதோசொல்லுகிறார்கள்.  காவி உடை அணிந்த முருகன், சனீஸ்வரன், ருத்ரதாண்டவ நடராசர் போன்ற படங்களையும் வைக்கக் கூடாது என்கிறார்கள்.எனது கிறிஸ்தவ நண்பர்கள் சிலர் தங்கள் வீடுகளில் இருதய ஆண்டவர் படம் , இயேசு சிலுவையில் உள்ள படம் போன்றவற்றை வைப்பதில்லை. எனக்கு இவைகளில் நம்பிக்கை இல்லை.

ஒவ்வொருவர் மனதிலும்ஒருகவலைஇருக்கத்தான்செய்கிறது.  சிலருடைய கவலை வெளியில் தெரிந்து விடுகிறது. பலருடைய கவலை வெளியில் தெரிவதில்லை. எல்லோரும் சந்தோஷமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். நமக்கும் மேலே ஏதோ ஒரு சத்தியத்திற்கு கட்டுப்பட்டு எல்லாம் இயங்கி வருகின்றன. நமது எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைப்பதில்லை. நீங்கள் வீட்டில் எந்த படத்தை வைத்தாலும் வைக்காவிட்டாலும் வருவது வந்துதான் தீரும். அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்தான் நமக்கு வேண்டும். படம் வைப்பது  என்பது அவரவர் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் பொறுத்தது. 

கீதாசாரம்:

இப்போது “கீதாசாரம்என்ற தலைப்பில் கீதோபதேசம் காட்சி வண்ணப் படமாக பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. நிறையபேர் வீட்டில் இந்த தத்துவத்தைக் காணலாம். சிலர் சட்டைப் பையிலும், கைப் பைகளிலும் இதனை வைத்துக் கொள்கிறார்கள்.







உங்கள் வயது என்ன?

$
0
0

 
இப்போதுஅடிக்கடிஏதாவதுஒருவிண்ணப்பத்தை (APPLICATION FORM)
பூர்த்திசெய்யவேண்டியுள்ளது. நமக்காகஇல்லாவிட்டாலும்வீட்டில்உள்ளவர்களுக்கோஅல்லதுமற்றவர்களுக்கோஉதவிசெய்யும்போதும்நாம்இதைசெய்யவேண்டியுள்ளது.  வாக்காளர்அட்டை, ஆதர்அட்டை, ஏடிஎம் அட்டை, கிரெடிட் அட்டை, வருமானவரி அட்டை என்று ஏகப்பட்ட அட்டைகள். எல்லாவற்றிற்கும் நமது பிறந்த தேதியைக் கேட்பார்கள். அதில் ஒன்றும் பிரச்சினையில்லை. எழுதிவிடலாம். ஆனால் சில இடங்களில் உங்கள் வயது ( AGE )என்று கேட்டு வைப்பார்கள். அப்போது சிலருக்கு முடிந்த ஆண்டுகளை கணக்கு எடுத்துக் கொள்வதா அல்லது நடப்பு ஆண்டா என்று சந்தேகம் வந்துவிடும். (சட்டப்படி நமக்கு முழுமை பெற்ற ஆண்டுகளைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும


ஓட்டு போடும் வயது: 18 - நிரம்பியவர்
திருமண வயது: ஆண் 21 வயது நிரம்பியவர் /பெண் 18 வயது நிரம்பியவர்
மூத்த குடிமகன் (SENIOR CITIZEN) என்றால் 60 வயது நிரம்பியவர்

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். என்னோடு பணிபுரிந்த நண்பர் ஒருவர், யாராவது அவரது வய்தைக் கேட்டால் எப்போதும் நாற்பது என்றுதான் சொல்வார். அவருக்கு அப்போது வயது ஐம்பது. ஒல்லியாக இருப்பதால் தலைக்கு சாயம் பூசிக் கொண்டு சின்ன பையன் போன்று இருப்பார்.


நான் அடிக்கடி செல்லும் சலூன்காரர். வங்கியில் ஒரு கணக்கு தொடங்க
வேண்டும் என்றும் என்னை அறிமுகம் செய்து வைக்குமாறும் கேட்டுக் கொண்டார். வழக்கம் போல விண்ணப்ப பாரத்தில் எல்லாவற்றையும் பூர்த்தி செய்து விட்டு அவருடைய பிறந்த தேதியைக் கேட்டால் தெரியாது என்று சொல்லிவிட்டு வாக்காளர் அட்டையைக் காட்டினார். அதில் 2006 ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று அவரது வயது என்ன என்று இருந்தது. பிறந்த தேதியையும் வயதையும் கணக்கிட்டு வந்த வேலையை நிறைவு செய்தோம்.

பேப்பர் பென்சிலை வைத்துக் கொண்டு கணக்கு போடுவதை விட , மிகவும் துல்லியமாக தெரிந்து கொள்ள, இப்போது இண்டர்நெட்டில் குறிப்பிட்ட தளங்களுக்கு சென்று ந்மது பிறந்த தேதியைத் தந்தால் போதும், நமது எத்தனை வயது, மாதம், வாரம், நாள், நிமிஷம் என்ற விவரம் வந்துவிடும். கீழே உள்ள இணைய தளம் சென்று பார்க்கவும்.


<iframe src="http://easycalculation.com/date-day/embedded_age-calculator.php" width="400" height="500" frameborder="0"></iframe>

மேலும் அவர்கள் தந்துள்ள CODEஇனை நமது இணைய தளத்தில் வைத்துக் கொள்வதன் மூலம் எப்போதும் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

Age calculator

[date range can be from 01-01-01 to 31-12-275759 ]

Today's Date is :
Date - Month - Year -
Enter Your Date of Birth :
Date - Month - Year -





Your Age is
Your Age in Days
Your Age in Hours
(Approximate)
Your Age in Minutes
(Approximate)









 
          
கொசுறு செய்தி:
  

இந்த தளத்தின் முதற்பக்கத்தில் ஸ்ரீரங்கம் பற்றிய விவரங்கள் ( CAR PARKING - உட்பட) உள்ளன.

நாள், நட்சத்திரம், ராசி போன்றவற்றில்  ஆர்வம் உள்ளவர்கள், இதே வலைத்தளம்சென்றுபிறந்தநாள், நேரம்போன்ற குறிப்புகளைத் தந்தால்உங்கள்நட்சத்திரம், ராசிஆகியவற்றை தமிழ் / ஆங்கிலம் இரண்டிலும் தெரிந்துகொள்ளலாம்

 



( PHOTOS  THANKS TO  “ GOOGLE ” )

 







தபால் துறை: அழைப்பிதழ்கள் போய்ச் சேர்வதில்லை

$
0
0


முன்பெல்லாம்ஒருதபாலைவெளியூருக்குஅனுப்பினால்ஒருவாரத்திற்குள்சென்றுசேர்ந்துவிடும். உள்ளூர்தபால்களுக்குஇரண்டுநாட்கள். அடுத்தநாளேபோய்ச்சேர்ந்தஅதிசயமும்உண்டு. இப்போதுஅப்படிஇல்லை.  நாம் அனுப்பும் தபால்கள் சரியாகச் சென்று சேர்வதில்லை. மற்றவர்கள் அனுப்பும் தபால்களும் சரியாக வந்து சேர்வதில்லை.

என்னோடு பணிபுரிந்த நண்பர்  ஒருவர் தனது மகள் திருமணத்திற்காக அழைப்பிதழை எனக்கு நேரில் கொடுக்க விரும்பினார். நான் வீட்டில் இருப்பதை உறுதி செய்துகொள்ள என்னை செல்போனில் அழைத்தபோது, நான் வெளியூரில் இருந்தபடியினால் அழைப்பிதழை வீட்டு முகவரிக்கு தபாலில் அனுப்பச் சொன்னேன். அவர் சொல்லி பதினைந்து நாட்கள் ஆகியும் தபாலில் எதுவும் வரவில்லை. அவரிடம் போனில் விசாரித்ததற்கு அப்போதே அனுப்பி விட்டதாகச் சொன்னார். அப்புறம் அவரை நேரில் சென்று பார்த்து ஒரு அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டேன். அவரோ இதே போல் பலருக்கும் தபாலில் அனுப்பியவை சென்று சேரவில்லை என்று வருத்தப்பட்டார்.

இதே போல இன்னொரு நண்பர், தனது மகள் திருமணத்திற்கு தபாலில் பத்திரிகையை அனுப்பி வைத்தார். வரவில்லை. அவரிடம் செல்போனில் திருமண நாள், நடக்கும் இடம், நேரம் தெரிந்து கொண்டு சென்று வந்தேன். அவருக்கும் முன்னவர் போல் இதே அனுபவம். அவர் தபாலில் அனுப்பிய பல பத்திரிகைகள் சென்று சேரவில்லை. திருமணம் முடிந்து நான்கு நாட்கள் கழித்து எனக்கு அவர் அனுப்பிய அழைப்பிதழ் வந்து சேர்ந்தது. அவர் சொன்ன தகவல்.  அவரது கிராமத்து கோயிலில் கும்பாபிஷேகம். கிராமத்தார் அனுப்பிய அழைப்பிதழ் நிகழ்ச்சி முடிந்து ஒருவாரம் சென்ற பிறகுதான் வந்தது.

எனக்கும் இதே அனுபவம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் எனது மகள் திருமணம் நடந்தது.அழைப்பிதழ்களை நேரில் கொடுகக முடிந்தவர்களுக்கு நேரில் கொடுத்தேன். மற்றவர்களுக்கு, குறிப்பாக வெளியூர் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும், தபாலில் பத்திரிகைகளை இரண்டு வாரங்களுக்கு முன்னரே அனுப்பவேண்டும் என்று தபால் அலுவலகம் சென்று நேரில் கொடுத்துவிட்டு வந்தேன்.. ஆனால். நிறையபேருக்கு தபால் சென்று சேரவில்லை; சிலருக்கு திருமணம் முடிந்து சில நாட்களுக்குப் பிறகுதான் கிடைத்தது.

இதில் எங்கள் மூவருக்கும் ஒரே மாதிரியான அனுபவம். மேலும் நாங்கள் தனியார் கூரியர் மூலம் அனுப்பிய அழைப்பிதழ்கள் சரியாக சென்று சேர்ந்து விட்டன. இதே போன்ற  அனுபவம் உங்களுக்கும் நேர்ந்து இருக்கலாம்.

பெரும்பாலும் நகர்ப்புற தபால் அலுவலகங்களில் மட்டுமே இவ்வாறு நடக்கிறது. காரணம் கட்டு கட்டாக ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு ஒரே சமயத்தில் தந்து விடுகிறார்கள். அதிக தபால்களைப் பார்த்தவுடன் அவர்கள் பதற்றம் ஆகிவிடுகிறார்கள் போலிருக்கிறது.  நமது இந்திய தபால் துறையின் சேவை இவ்வாறு இருக்கிறது.தபால் ஊழியர்களிடம் இதுபற்றி விசாரித்தால், எங்கள் துறையில் ஆட் பற்றாக் குறையும், அதிக வேலைப் பளுவும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ( மின்னஞ்சல், செல்போன் வந்தபிறகு வாழ்த்து அட்டைகள் அனுப்புதல், கடிதம் எழுதுதல், தந்தி அனுப்புதல் போன்றவைகளை மக்கள் அதிகமாக நாடுவதில்லை. இதனால் ஊழியர்களுக்கு வேலை அதிகம் இல்லை என்று தங்கநாணயம் (GOLD COIN) விற்றல் போன்ற வணிகரீதியான (COMMERCIAL) செயல்களை தபால் இலாகா மேற்கொண்டுள்ளது.இதனால் வேலைப்பளு அதிகம் ஏற்பட்டு விட்டதாக சொல்கிறார்கள்.) மேலும் பல இடங்களில் பல தபால்கள், டெலிவரி செய்யாமலேயே  கட்டுகட்டாக ஊருக்கு வெளியே கிடந்த் செய்திகளையும் அவ்வப்போது பார்க்க நேரிடுகிறது.  

இதுகுறித்து யாரும் புகாரும் செய்வதில்லை. காரணம் எல்லாமே சாதாரண தபாலகள். இதற்கான தீர்வை, தபால் இலாகாதான் செய்ய வேண்டும். “ஒன்றுபடுவோம்! போராடுவோம்என்று முழக்கமிடும் தொழிற்சங்க நிர்வாகிகளும், ஊழியர்களும் இதுகுறித்து சேவை மனப்பான்மையோடு யோசிக்க வேண்டும்.


( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )
 





           

அய்யா! …. நீங்க! நல்லவரா? கெட்டவரா?

$
0
0


ஒரு கால கட்டத்தில், தமிழ் திரைப்பட உலகில் திரும்பத் திரும்ப பார்த்த முகங்களையே கதாநாயகர்களாக ரசிக்க வேண்டி இருந்தது..   எழுபது தொடங்கிய போது கமல்ஹாசன், ரஜினிகாந்த்த், விஜயகுமார் போன்ற துடிப்புள்ள இளம் கதாநாயகர்கள் வந்தனர். திரைப்பட உலகமே தலைகீழாகிப் போனது. இளம் கலைஞர்களுக்கு நல்ல வரவேற்பு தொடங்கியது


கமல்ஹாசன்:

இதில் நடிகர் கமல் பிறவி கலைஞர். இவர் நடித்த, களத்தூர் கண்ணம்மா
படத்தை சின்ன வயதில் பார்த்தது. “அம்மாவும் நீயே! அப்பாவும் நீயேஎன்ற பாடலில் அவர் வந்த காட்சி இன்றும் ஒலிக்கிறது. எனது கல்லூரி நாட்களில் எனது நண்பர்களோடு, பாலச்சந்தர் டைரக்‌ஷனில் உருவான இவரது படங்களை விரும்பி பார்ப்போம். எழுபது தொடங்கி இன்றுவரை அவர் தனது படங்கள் ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். அதில் நாயகன் படத்தில் ( 1987 இல் வந்த படம் ). கமல், பம்பாயில் தாதாவாக வாழ்ந்த ஒருவராகவே மாறி,  நடித்து இருக்கிறார். படத்தை தத்ரூபமாக இயக்கியவர் டைரக்டர் மணிரத்னம். இசை இளையராஜா.


நாயகனில் எனக்குப் பிடித்த காட்சி:


நாயகன் திரைப்படம். கிளைமாக்ஸ் காட்சி. தாதாவான, வேலு நாயக்கரை
( கமல்ஹாசன்) கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார்கள். அவருக்கு ஆதரவாக கோர்ட்டு வாசலில் ஆதரவாளர்கள் கோஷம் செய்கிறார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்பு. அவர்களைக் கடந்து கோர்ட் நுழைவு வாயில் வருகின்றனர். அங்கே வேலுநாயக்கரின் மகள் ( கார்த்திகா ) தனது மகனுடன் நின்று கொண்டு இருக்கிறார். நாயக்கர் அப்போதுதான் தனது பேரனை முதன்முதலாக பார்க்கிறார். அவன் அம்மா அனுப்ப பேரன் தாத்தாவைப் பார்க்கிறான். தாத்தாவிடம் கேட்கும் கேள்விகள் ... ...

“உன்னை ஏன் ஜெயில்ல வச்சிருக்காங்க?
“நீங்க ஏதாவது தப்பு பண்ணீனிங்களா?
“நீங்க நல்லவரா? கெட்டவரா?
“சொல்லுங்க!
“நீங்க நல்லவரா? கெட்டவரா?


அப்போது வேலுநாயக்கரின் பதில் “ தெரியலியேப்பா... .. தெரியலே! அடுத்தவர்களுக்கு ஏதேனும் கொடுத்தே பழக்கப்பட்ட வேலுநாயக்கர், தனது பேரனுக்கு கொடுப்பதற்காக மேல் சட்டைப் பாக்கெட்டில் துழாவுகிறார். ஒன்றுமே இல்லை. கை விரலில் அணியும் மோதிரமும் இல்லை. யோசித்துவிட்டு தனது கழுத்தில் இருந்த ருத்திராட்சக் கொட்டை மாலையை பேரனுக்கு தருகிறார்.

அடுத்து நாயக்கர் உள்ளே கொண்டு செல்லப்படுகிறார். அப்போது அவருக்கு நெருக்கமான செல்வம் என்ற தொண்டர் ஒருவர் (ஜனகராஜ்) வேகமாக வருகிறார் “நாயக்கரே! நாங்க இருக்கோம் நாயக்கரே! நாங்க இருக்கோம்! உனக்கு ஒன்னும் ஆகாது.. போயிட்டு...  வாஎன்று கத்துகிறார். அவரை போலீசார் அப்புறப் படுத்துகிறார்கள்.

கோர்ட்டில் சாட்சியங்கள் சரியில்லை என்று, வேலு நாயக்கரை  விடுதலை செய்கிறார்கள். நாயக்கர் கோர்ட்டுக்கு வெளியே வருகிறார். அவரது ஆதரவாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கோஷமிடுகிறார்கள். அப்போது நாயக்கரால் கொல்லப்பட்ட், போலீஸ் அதிகாரியின் மகன் (மனநிலை பாதிக்கப்பட்டவன்), தனது தந்தை போட்டு இருந்த போலீஸ் யூனிபார்மில் அங்கு வருகிறான். துப்பாக்கியால் வேலு நாயக்கரை சுடுகிறான். நாயக்கர் மரணம் செய்தியாகிறது. திரைப்படம் முடிவடைகிறது..


படம் முடிந்து வெளியே வரும்போது எல்லோருடைய மனதிலும் கேட்கப்படும் கேள்வி “நீங்க நல்லவரா? கெட்டவரா?. உதடுகள் முணுமுணுத்த பாடல் ... “ தென்பாண்டிச் சீமையிலே! தேரோடும் வீதியிலே! ‘.


கதையின் முடிவு:

வேலுநாயக்கர் போன்றவர்கள் இன்றும் ஏதாவது ஒரு ரூபத்தில், எங்காவது ஆதிக்கம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.திரைப்படத்தில் அவர்களைஎன்னதான் வள்ளல்களாக, நல்லவர்களாக,பெரிய மனுஷன்களாக சித்தரித்தாலும் கதையின் முடிவை மாற்றி எழுத யாருக்கும் மனது ஏனோவருவதில்லை.. அவர்கள் எடுத்த வன்முறை என்ற ஆயுதத்தாலேயே அவர்களது வாழ்வும் முடிவடைகிறது. “கத்தியை எடுத்தவன் கத்தியாலேயே சாவான் . என்பது முதுமொழி.  அவரைப் போன்றவர்களிடம், நாம் அய்யா! நீங்க! நல்லவரா? கெட்டவரா?என்றுநாம் கேட்க முடியாது. அப்படி கேட்டால் அவரைச் சுற்றி உள்ள அடிப்பொடிகளின் கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல்முடியாது. அவரை  கேட்பதைவிட நமக்கு நாமே நீங்க! நல்லவரா? கெட்டவரா?கேட்டுக் கொள்வதும் ஒருவிதத்தில் நமக்கும் நல்லதுதான்.

தென்பாண்டிசீமையிலே!
தேரோடும்வீதியிலே!
மான்போலவந்தவனை
யார்அடித்தாரோ!
யார்அடித்தாரோ!

வளரும்பிறையேதேயாதே!
இனியும்அலுத்துதேம்பாதே!
அழுதாமனசுதாங்காதே!
அழுதாமனசுதாங்காதே!



தென்பாண்டிசீமையிலே!
தேரோடும்வீதியிலே!
மான்போலவந்தவனை
யார்அடித்தாரோ!
யார்அடித்தாரோ!


           - இசையமைத்து பாடியவர்: இளையராஜா





( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )

கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் (அரியலூர்) தரிசனம்

$
0
0


அரியலூர் அருகே உள்ளது கல்லங்குறிச்சி பெருமாள் கோயில். இதனை
கலியுக வரதராஜ பெருமாள் கோயில் என்று அழைப்பார்கள்.அரியலூரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் இந்த கோயில் மிகப் பிரசித்தம். இங்குள்ள பெரும்பாலோர் பெயர்கள், இந்த கோயில் பெருமாளின் பெயரை முன்னிலைப் படுத்தி கலியராஜ், கலியசுந்தரம், கலியம்மாள் என்று “கலியில் தொடங்குவதாகவே இருக்கும்.

கல்லங்குறிச்சி கோயிலுக்கு செல்லும் ஆசை:

எனது தாத்தாவின் (அம்மாவின் வழி) குடும்பத்தினருக்கு இந்த கோயில் எப்படி நெருக்கம் என்று தெரியவில்லை. என் தாத்தாவிற்கு முதல் இரண்டும் பெண் பிள்ளைகள். மூன்றாவதாக ஆண்பிள்ளை பிறந்தால் இந்த பெருமாள் பெயரை  வைப்பதாக வேண்டிக் கொண்டார்களாம். ஆனால் மூன்றாவதும் பெண்ணாகவே (என் அம்மா) பிறந்தது. என்றாலும் பெருமாள் பெயரையே என் அம்மாவிற்கு “கலிய சுந்தரம்என்று வைத்து விட்டார்கள். (ஆனால் பின்னாளில் அம்மாவின் பெயரை ஆவணங்களில் எழுதும் போது ஆண்/பெண் பெயர்க் குழப்பம் வந்தபடியினால், நாங்கள் எங்கள் அம்மாவின் பெயரை “சுந்தராம்பாள்என்று மாற்றி விட்டோம்). இந்த விஷயத்தை கேள்விப் பட்டதிலிருந்து, எங்கள் தாத்தா குடும்பத்தினர் வேண்டிக் கொண்ட கல்லங்குறிச்சி பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அந்த ஆசை சென்ற வாரம்தான் நிறைவேறியது.

திருச்சி அரியலூர் - கல்லங்குறிச்சி:

சென்ற ஞாயிறு (02.06.2013) அன்று நான் எனது மனைவி, மகன் ஆகிய
மூவரும் எங்கள் வீட்டை விட்டு காலை கிளம்பினோம். விடுமுறை நாள் என்பதால் புறப்பட்டதில் கொஞ்சம் தாமதம். பின்னர் திருச்சி சிந்தாமணி (சத்திரம்) பேருந்து நிலையம் வந்து அரியலூர் செல்லும் பஸ்சில் ஏறினோம். திருச்சி அரியலூர் சாலையில் அடிக்கடி சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகள், கரும்பு ஏற்றி வரும் லாரிகளால் சாலை ரொம்பவும் மோசம். மேலும் அடிக்கடி விபத்தும் நிகழும். நாங்கள் அரியலூர் சென்று  சேர்ந்தபோது மதியம் 11.30 ஆகி விட்டது. அரியலூர் பேருந்து நிலையம் என்றுதான் அழகாக மாறும் என்று தெரியவில்லை. அரியலூரிலிருந்து கல்லங்குறிச்சிக்கு செல்ல மினி பஸ்கள் உண்டு. எனவே நடை சாத்துவதற்குள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக  ஆட்டோ ஒன்றை பிடித்து (ஆட்டோ கட்டணம் செல்வதற்கு மட்டும் ரூ 150/=. ) சென்றோம்.

கல்லங்குறிச்சி கோயிலில் வழிபாடு:

கோயிலுக்கு சென்று சேர்ந்தபோது மணி மதியம் பன்னிரண்டு. உச்சிகால பூஜை மதியம் 12.30 என்பதால், கோயில் நடை திறந்து இருந்தது. கோயிலுக்கு வெளியே அந்த ஊர் ஜனங்கள் வைத்து இருந்த கடைப் பெண்கள் சொல்லியபடி இரண்டு அர்ச்சனை தட்டுகள் ஒன்று மூலவருக்கு இன்னொன்று உற்சவருக்கு ( இரண்டு துளசி மாலைகள்,ஒரு தேங்காய் , குங்குமம் ) வாங்கிக் கொண்டோம். அர்ச்சனை சீட்டு தட்டு ஒன்றுக்கு ரூ 2/=. வீதம் இரண்டு வாங்கினோம். நான் எந்தக் கோயிலுக்குப் போனாலும் அந்த கோயில் தலபுராண புத்தகத்தை வாங்குவது வழக்கம். இங்கும் வாங்கினேன். பின்னர், கோயிலின் உள்ளே நுழைந்ததும் கருடாழ்வார்
சந்நிதியில் சூடம் ஏற்றி வழிபட்டோம். மூலவருக்கான அர்ச்சனை தட்டை அங்குள்ள பூசாரியிடம் கொடுத்தோம். அவர் தேங்காயை வெளியில் நீங்களே உடைத்துக் கொள்ளுங்கள் “ என்று கொடுத்து விட்டார். மூலஸ்தானத்தில் 12 அடி உயரத்திலான கம்பத்தைஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் உள்ளது. இவர்தான்மூலவர். வேறு சிலைகள் எதுவும்இல்லை. பூசாரி காட்டும் சிறிய தீப ஒளியில் சரியாகத் தெரியவில்லை. நாங்கள்மூலவரை வழிபட்டதும், உட்பிரகாரத்திலேயே வெளியில் உள்ள உற்சவரை வழிபட்டோம். அங்கு இளைய குருக்கள் ஒருவர் பூசை செய்தார். அவர் உற்சவரை புகைப்ப்டம் எடுப்பதில் தடை இல்லை என்றதும், அங்குள்ள உற்சவரை நானும் எனது மகனும் படம் பிடித்தோம். ( வெளியேயும் படங்கள் எடுத்தோம்.) பின்னர் வெளியே வந்து மூலவருக்கு எதிரே இருக்கும் கருடாழ்வார் சன்னதியின் அருகில் இருந்த தேங்காய் உடைக்கும் எந்திரத்தில் தேங்காயை நாங்களே உடைத்து கருடாழ்வாரை வழிபடுவதற்கும்., உச்சிகால பூஜை முடிவதற்கும் சரியாக இருந்தது. இனிமேல் மாலை3 மணிக்குத்தான் நடை திறக்கும்..  

கோயில் பற்றிய சில செய்திகள்:

பெரும்பாலும் பெருமாள் கோயில் மடப்பள்ளிகளில் பொங்கல், புளியோதரை விற்பனைக்கு கிடைக்கும். இந்த பெருமாள் கோயிலில் அவை சனிக்கிழமை மற்றும் சிறப்பு நாட்களில் மட்டும் கிடைக்கும். அன்னதானம் எல்லா நாட்களிலும் உண்டு. நாங்கள் சென்ற நேரம் அன்னதானமும் முடிந்து விட்டது.


பின்னர் கோயிலை சுற்றிப் பார்த்தோம். கோயிலின் மூல ஸ்தானத்தில் ஆஞ்சநேயர் இருப்பதால் இந்த கோயிலில் திருமண நிகழ்வுகளை யாரும் நடத்துவதில்லை, காது குத்துதல் போன்ற நிகழ்ச்சிகளை மட்டும் வைத்துக் கொள்கிறார்கள். கோயிலின் தலபுராணம் மங்கான் படையாட்சி என்பவரது குடும்ப வரலாறாக இருந்த போதிலும், இந்த கோயிலுக்கு எல்லா சமூக மக்களும் வந்து வழிபடுகின்றனர். கோயிலில் பெரும்பாலும் ஆடு மாடுகள் மற்றும் நெல், பயறு, மிளகாய் போன்ற விளை பொருட்களைத்தான் இங்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக தருகின்றனர். கோயில் உண்டியல்களும் உண்டு. கோயிலின் உள்ளே கருடாழ்வார் சன்னதி எதிரே உள்ள, தசாவதார மண்டபத்தில் 12 தூண்கள் உள்ளன. முதல் இரண்டு தூண்கள் தவிர, மீதமுள்ள பத்து தூண்களிலும் திருமாலின் பத்து அவதாரங்களையும் சிற்பங்களாக வடிவமைத்துள்ளனர். கோயிலுக்கு வெளியே காற்றோட்டமான பெரிய திடல்உள்ளது. பஸ், வேன், காரில் செல்பவர்கள் கார் நிறுத்தம் ( CAR PARKING ) குறித்து கவலை அடையத் தேவையில்லை.  








கல்லங்குறிச்சி அரியலூர் திருச்சி:

எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு கல்லங்குறிச்சி பஸ் நிலையம் வந்தோம்.  சற்று நேரத்தில், பாரதிராஜா படங்களில் வருவது போன்று,  சாலையில் புழுதியை கிளப்பிக் கொண்டு மண்வாசனையுடன் ஒரு மினி பஸ் வந்தது. அரியலூர் செல்ல பயணச் சீட்டு கட்டணம் ரூ 4/=. அரியலூரில் ஒரு நல்ல சாப்பாடு ஹோட்டலை தேடியலைந்தோம். பஸ் ஸ்டாண்டிலிருந்து கொஞ்சம் தொலைவில் திருச்சி ரோட்டில் இருந்த மாருதி ரெஸ்டாரெண்ட் வந்து பகல் உணவை முடித்துக் கொண்டு மாலை திருச்சி வந்து சேர்ந்தோம்.  

இந்த பதிவை இவ்வளவு விரிவாக எழுதுவதற்கு காரணம், கல்லங்குறிச்சி பெருமாள் கோயிலுக்குப் புதிதாக செல்பவர்கள் அறிந்து கொள்வதற்காகத்தான்.




பண்டைத் தமிழர்களின் காட்டுமிராண்டிப் போர்:

$
0
0

ஒருமுறைபுதுமைப்பித்தன்,  கல்தோன்றி, மண்தோன்றாக்காலத்தேமுன்தோன்றியமூத்தகுடி  (புறப்பொருள்வெண்பாமாலை (பாடல்எண்.35) என்றவாக்கியத்திற்கு  உலகில்குரங்குதான்முதலில்பிறந்ததுஎன்றால்அதிலும்கல்தோன்றிமண்தோன்றாகாலத்தேமுன்தோன்றியமூத்தகுரங்குதமிழ்க்குரங்கேஎன்றுகேலிசெய்தார். இதுநகைச்சுவைக்காகசொல்லப்பட்டது என்பதால், அப்போது  யாரும்இதனைபெரிதுபடுத்தவில்லை. அதேபோலபெரியார்ஒருமுறைதமிழ்ஒருகாட்டுமிராண்டிமொழிஎன்றுசொன்னார். அவர்என்னஅர்த்தத்தில்சொன்னார்என்பதற்குஅவர்தொண்டர்கள், கருத்துரைதந்தார்கள். யாரும்பெரிதாகஎடுத்துக்கொள்ளவில்லை. எதுஎப்படிஇருப்பினும், தமிழர்நடத்தியபோர்முறையைப்பார்க்கும்போதுதமிழர்வீரம்என்பதுகாட்டுமிராண்டிகள்செயல்என்றேதெரிகிறது.

பண்டைத் தமிழர்வரலாற்றைப்பற்றிஎழுதும்போதுதமிழ்நாடுஇப்போதுபல்வேறு, மாவட்டங்களாகஇருப்பதைப்போன்று, அன்றும்இருந்தனஎன்பதைப்போன்றஒருபிம்பத்தைஉண்டுபண்ணிவிட்டார்கள். உண்மையில்தமிழர்கள்ஆங்காங்கேசின்னச்சின்னகுழுக்களாகத்தான் ( TRIBES) இயங்கி வந்தனர்.ஒவ்வொருவரும்தாங்கள்இருந்தபகுதியைநாடுஎன்றுஅழைத்துக்கொண்டனர். வலுவான ஒரு குழுவினர் மற்ற குழுவினரை அடக்கி தம் நாட்டை விரிவு படுத்திக் கொண்டனர். இப்போதுஅரசியல்கூட்டணிஇருப்பதுபோன்றுஅன்றுசிலகுழுவினர்தங்கள்தலைமையில்குழுக்களைசேர்த்துக்கொண்டுஒருவர்மீதுஒருவர்படையெடுத்துபோரிட்டுக் கொண்டனர். மேற்குதொடர்ச்சிமலைத்தொடர், மலைக்குஅப்பால்இருந்ததமிழ்மக்களைமுற்றிலும்பிரித்துவிட்டது. இன்றையஅரசியல்கூட்டணிமாறுவதைப்போலஅன்றுகுழுக்களும்அணிமாறிக்கொண்டேஇருந்தனர். பின்னாளில் இந்த குழுக்கள் ஒன்றோடொன்று கலந்து, சேர சோழ பாண்டியர் என்று உருவாக்கம் பெற்றன. தமிழ்நாடுஎன்றபெயரில்அப்போதுநாடுஏதும்கிடையாது

தென்பாண்டிகுட்டம்குடம்கற்காவேண்பூழி
பன்றிஅருவாஅதன்வடக்குநன்றாய
சீதமலநாடுபுனல்நாடுசெந்தமிழ்சேர்
ஏதமில்பன்னிருநாட்டெண்.


என்பது ஒரு பழம் பாடல். இது அந்த காலத்தில் இருந்த செந்தமிழ் நாட்டின் பன்னிரண்டு பிரிவுகளைச் சொல்லும்.

ஆணாதிக்கம்மிக்கஇந்தக்குழுக்களில்பெண்கள்அடிமையாகத்தான்வைக்கப்பட்டுஇருந்தனர். அனைத்துக்குழுவினராலும்தமிழ்பொதுவாகப்பேசப்பட்டாலும்ஒவ்வொருகுழுவினரும்தமிழைஒவ்வொருவிதமாகஉச்சரித்தார்கள்.

தமிழர்போர்முறைகள்:

தமிழர்கள்போர்நெறியைப்பற்றிசொல்லும்நூல்புறப்பொருள்வெண்பாமாலைஎன்பதாகும். இதனைஎழுதியவர்ஐயனாரிதனார்.  இவர்அந்தகாலத்தில்தமிழர்களிடையேஇருந்தபோர்நடைமுறையைத்தொகுத்துஎழுதியுள்ளார். அதிலுள்ளசிலவிவரங்களைப்பார்ப்போம்.

வெட்சியும்கரந்தையும்:

அன்றுஒவ்வொருகுழுவினரிடமும்ஆநிரைகள்எனப்படும்கால்நடைச்செல்வம்இருந்தது. அவற்றைகைப்பற்றஒருநாட்டினர்இன்னொருநாட்டின்மீதுபோர்தொடுத்தனர். இந்தபோர்முறையைவெட்சிஎன்றார்கள். அப்போதுஅடையாளமாகவெட்சிமலர்அணிந்துசென்றனர். அவ்வாறுஆநிரைகளைக்கவரவருபவர்களைஎதிர்த்துபோர்நடக்கும. இவ்வாறுஎதிர்தாக்குதல்நடத்துவதுகரந்தைஎனப்பட்டது. அப்போது அடையாளமாககரந்தைமலர்அணிந்துகொண்டனர்.

வஞ்சியும்காஞ்சியும்:

சிலசமயம்மன்னனுக்குஅடுத்தநாட்டையும்தனதுநாட்டுடன்சேர்த்துக்கொள்ளும்மண்ணாசைவந்துவிடும். அப்போதுஎதிரிநாட்டைகைப்பற்றபோர்நடக்கும். இந்தபோர்வஞ்சிஎனப்பட்டது. அப்போதுவஞ்சிப்பூஅணிந்துசெல்வார்கள். இவ்வாறுமண்ணாசைகொண்டுவருபவர்களைஎதிர்த்துபோர்செய்தல்காஞ்சிஎனப்பட்டது. அப்போதுகாஞ்சிமலர்அணிந்தனர்.

உழிஞையும்நொச்சியும்தும்பையும்:

வேற்றுநாட்டுமன்னன்கோட்டைஒன்றைக்கட்டிக்கொண்டுஅதனுள்இருப்பான். அவன்கோட்டையைக்கைப்பற்றநடக்கும்போர்உழிஞைஎனப்படும். அப்போதுவீரர்கள்உழிஞைப்பூசூட்டிக்கொண்டனர். கோட்டைக்குள்இருக்கும்மன்னன்எதிரிகளை, எதிர்த்துசெய்யும்போர்நொச்சிஎனப்பட்டது. அப்போதுநொச்சிப்பூஅணிந்துகொண்டனர்.  

இவற்றிற்கும்மேலாகதரையிலும்போர்நடந்தது. இந்தயுத்தத்தைதும்பைஎன்றனர். அப்போதுஇருபக்கவீரர்களும்தும்பைப்பூவைஅணிந்தனர். 

வாகை :

இரண்டுநாடுகளுக்குஇடையேநடக்கும்போரில்பலம்உள்ளநாடுவெற்றிபெறுவதுஎன்பதுஇயற்கை. வெற்றியைவாகைப்பூசூடிகொண்டாடினார்கள். இதுவாகைஎனப்பட்டது.

போர்க்கருவிகளும்உபாயங்களும்:

இன்று, போர்என்றாலேமக்கள்வெறுக்கின்றனர். போர்வெறியன்என்று
முகம்சுழிக்கின்றனர். அன்றையபோர்முறையானதுஒருவரைஒருவர்தாக்கிக்கொண்டும். வாளால்வெட்டிக்கொண்டும்இறப்பதாகத்தான்இருந்தன. யாரிடம் (எந்தகுழுவினரிடம்) போர்வீரர்கள்அல்லதுபோர் (தீவைத்துக்கொளுத்துதல்போன்ற) உபாயங்கள்அதிகம்இருந்ததோஅவர்கள்வென்றார்கள். ( கற்காலத்தில்கற்களும், இரும்புகாலத்தில்இரும்பால்ஆனஆயுதங்களும்பயன்படுத்தப்பட்டன.) தமிழர்களின்போரின்போது, வாள், வேல், ஈட்டி, அம்பு, அரிவாள், கோடரி, வளரி, மடுவுபோன்றஆயுதங்களைப்பயன்படுத்தினர். எதிரிநாட்டுப்பெண்கள்சூறையாடப்பட்டனர்; கணவனைஇழந்தமகளிர்அவர்களதுஉறவினர்களால்உடன்கட்டைக்குவற்புறுத்தப்பட்டனர்.. குடியிருப்புகள்கொளுத்தப்பட்டன. விளைநிலங்கள்அழிக்கப்பட்டன. பொருட்கள்களவாடப்பட்டன



இங்குஒருசிலகாட்சிகள்... ...

ஆநிரைகளைகவருவதற்குமுன்னர்அந்தஊரினைப்பற்றியஎல்லாதகவல்களையும்ஒற்றர்கள்மூலம்தெரிந்துகொண்டனர். பின்னர்ஊரைச்சுற்றிவளைக்கின்றனர். ஊரிலுள்ளஒருவரும்தப்பஇயலாதுபோயிற்று. பின்னர்ஆநிரைகளையும்பொருட்களையும்கொள்ளையடிக்கின்றனர்.


உய்த்துஒழிவார்ஈங்குஇல்லைஊழிக்கண்தீயேபோல்
முந்துஅமருள்ஏற்றார்முரண்முருங்கத் - தம்தமரின்
ஒற்றினால்ஆய்ந்துஆய்ந்துஉரவோர்குறும்பினைச்
சுற்றினார்போகாமல்சூழ்ந்து 
-          புறப்பொருள்வெண்பாமாலை(பாடல்எண்.7)
          
தனதுஊரைஅழிக்கவந்தவெட்சிப்பகைவர்களைஎதிர்த்துபோரிடுகிறான்
ஒருகரந்தைவீரன். அவன்தனதுஎதிரியின்மார்பினைதனதுவேலால்பிளக்கிறான். பின்னர்எதிரியின்குடலைஉருவிதனதுவேலில்மாலையாகசுற்றிக்கொண்டுஆடுகிறான்.

மாட்டியபிள்ளைமறவர்நிறம்திறந்து
கூட்டிய·கம்குடர்மாலை - சூட்டியபின்
மாறிரியச்சீறிநுடங்குவான்கைக்கொண்ட
வேல்திரியவிம்மும்துடி
-          புறப்பொருள்வெண்பாமாலை(பாடல்எண். 30)

அந்தஊர்இதுவரைஅமைதியாகத்தான்இருந்தது. சோலைகளில்குயில்கள்அகவும். மக்கள்வருவதும்போவதுமாகஇயல்பானவாழ்க்கை. அந்தஊரைக்கைபபற்றவந்தஎதிரிகள்ஊரைத்தாக்கினர். பெண்கள்அலறிஅடித்துக்கொண்டுஓடுகின்றனர்.

அயில்அன்னகண்புதைத்துஅஞ்சிஅலறி
மயில்அன்னார்மன்றம்படரக்- குயில்அகவ
ஆடுஇரியவண்டுஇமிரும்செம்மல்அடையார்நாட்டு
ஓடுஎரியுள்வைகினஊர்
-          புறப்பொருள்வெண்பாமாலை(பாடல்எண். 49)
        
கோட்டையையானைப்படை, குதிரைப்படை, காலாட்படைஎன்றுஅனைத்துபடைகளின்துணைகொண்டுதாக்குகின்றனர். கோட்டைமதிலின்மீதுஉயரமானஏணிகளைவைத்துஏறுகின்றனர். உள்ளேஇருப்பவர்கள்சும்மாஇருப்பார்களா? கோட்டைமீதிருந்துஇவர்கள்மீதுபாம்புகளைவீசுகின்றனர். கடிக்கப்பழகியகுரங்குகளைஏவுகின்றனர். நெருப்பைஅள்ளிஅள்ளிக்கொட்டுகின்றனர். உள்ளேயிருந்துஎறியும்கருவிகொண்டுபெருங்கற்களைவீசுகின்றனர்.

கல்பொறியும்பாம்பும்கனலும்கடிகுரங்கும்
வில்பொறியும்வேலும்விலக்கவும் - பொற்புடைய
பாணிநடைப்புரவிபல்களிற்றார்சார்த்தினார்
ஏணிபலவும்எயில்
-          புறப்பொருள்வெண்பாமாலை (பாடல்எண். 112)

போர்காரணமாகஒருகுடும்பத்தில்உள்ளஎல்லோருமேஇறந்துவிடுகின்றனர். தனதுமகனும்இவ்வாறுஇறக்கஆற்றாதஒருதாய், “ முன்னம்நடந்தஒருபோரில்எனதுதந்தைபோரிட்டுஇறந்தான். இன்னொருபோரில்எனதுகணவன்போரிட்டுமாண்டான். அவ்வாறேஎன்னுடையதமையன்மாரும்போரிட்டுவீழ்ந்தனர். இப்போழுதுஎனதுமகனும்பகைவர்அம்புகளால்இறந்துபட்டான்  என்றுஅரற்றுகிறாள்.

கல்நின்றான்எந்தைக்கணவன்களப்பட்டான்
முன்நின்றுமொய்அவிந்தார்என்னையர் - பின்நின்று
கைபோய்கணைஉதைப்பக்காவலன்மேலோடி
எய்ப்பன்றிக்கிடந்தான்என்ஏறு 
                                     -  புறப்பொருள்வெண்பாமாலை (பாடல்எண்.176)

இவ்வாறுஇரக்கமற்றநெஞ்சினராகப்போரிட்டதைத்தான்தமிழர்வீரம்என்றுசொல்லிபெருமைப்பட்டுக்கொள்கின்றனர். “நமதுதமிழர்கள்வீரம்செறிந்தவர்கள்என்றுசொல்பவர்கள், தமிழர்கள்தங்களுக்குள்தமிழர்களோடு, ஒருவருக்கொருவர்போரிட்டார்கள்என்றுசொல்வதில்லை. பகைவர்களோடுபோரிட்டார்கள்என்றுமழுப்புவார்கள். பகைவர்கள் யார் என்றால் இங்கே தமிழனுக்கு தமிழன்தான்.
 

அகமும்புறமும்:

அகம்எனப்படும், தமிழ்இலக்கியப்பாடல்கள்அமைதியானவை. இலக்கியஇன்பம்மிகுந்தவை. காரணம்அவைபுலவர்கள்கற்பனையில்எழுந்தவை. ஆனால்பேராசைபிடித்தமன்னர்களால்நடத்தப்பெற்றபோர்களில்வெற்றிஒன்றேஇலக்கு. எனவே. காட்டுமிராண்டித்தனம்தான்இருந்தது. நாகரிகம்இல்லை


(குறிப்பு: இது ஒரு மாற்றுச் சிந்தனை கொண்ட கட்டுரை) 



( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )

குட்கா, பான் மசாலா தடை செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பாராட்டு:

$
0
0


நான்வழக்கமாகடீசாப்பிடும்கடை. அந்தகடைக்காரர்டீவியாபாரத்தோடுஒருபெட்டிகடைவியாபாரமும்செய்துவருகிறர்ர். டீக்கடையில்மற்றபொருட்களைவிடகுட்கா, பான்மசாலாபொருட்களை மட்டும், கடைக்குவந்தவுடனேயேபார்வையில்தெரியும்படிதோரணங்களாகதொங்க விட்டிருப்பார். ஒரு ஆட்டோடிரைவர்வருகிறார். பான்பராக் ஐந்துஅல்லதுஆறுபாக்கெட்டுகளைவாங்குகிறார். ஒருபாக்கெட்டைகடையிலேயேபிரித்துபோட்டுக்கொள்கிறார். ஏற்கனவேஅவரதுவாய்அந்தபாக்கையோபுகையிலையையோமென்றுமென்றுபற்கள், ஷோலேபடத்தில்வரும்வில்லன்கப்பர்சிங்பற்களைப்போன்றுகாவியேறிஉள்ளன. இந்தஆட்டோடிரைவர்போன்றுமற்றடிரைவர்கள், மாணவர்கள், கட்டிடத்தொழிலாளர்கள் ( குறிப்பாகவடஇந்தியதொழிலாளர்கள் ) என்றுநிறையபேர்வருகிறார்கள். ஒவ்வொருவரும்ஒருநாளைக்குஎத்தனைபாக்கெட்வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை.  யாரும் பான்பராக், பான்மசலா, குட்கா போன்றவற்றை வாயில் போட்டுக் கொள்வதால் ஏற்படும் ( வாய் புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்ற  ) தீமைகளை உணர்ந்த மாதிரி தெரியவில்லை. கடைக்காரருக்கு  விற்றவரை  லாபம்  தயாரிப்பாளர்களுக்கு கொள்ளை லாபம்.


தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு:  

  

முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள்,  சென்னை, மே. 8, 2013 அன்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார்.அதில் கூறியிருப்பதாவது:-

புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் ஏற்படுத்தும் புற்று நோய்களைதடுக்கும் நோக்கத்துடன் மத்திய அரசின் உணவு கலப்படத் தடைச் சட்டம் 1954ன்கீழ், மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை 19.11.2001 முதல் ஐந்துஆண்டுகளுக்கு எனது அரசு தடை செய்து, அறிவிக்கை வெளியிட்டது. ஆனால்தமிழ்நாடு மற்றும் இதர சில மாநிலங்களின் இத்தகைய அறிவிக்கைகள், குறித்தவழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தில், இதனை தடைசெய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாக கூறி, 2.8.2004 அன்றுஅறிவிக்கையை ரத்து செய்தது.

தற்பொழுது, உணவு கலப்படத் தடைச் சட்டத்திற்கு பதிலாக உணவு பாதுகாப்புமற்றும் தர நிர்ணயச் சட்டம் என்ற புதிய சட்டத்தை 2006-ல் மத்திய அரசுஇயற்றி உள்ளது. இந்த சட்டம் மற்றும் அதன் விதிமுறைகள் 5.8.2011 முதல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வந்தன.

தமிழக அரசும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த இதற்கென 'தமிழ்நாடு உணவுபாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம்என்ற தனித்துறையைஏற்படுத்தியுள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் விதிமுறைகளின்கீழ் எந்த ஒரு உணவிலும்சுகாதாரத்தைப் பாதிக்கும் பொருள் இருக்கக்கூடாது என்றும் புகையிலை மற்றும்நிக்கோட்டின் ஆகியவற்றை உணவுப் பொருளில் சேர்க்கக்கூடாது என்றும் விதிமுறைஉள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் முன்பு உள்ள ஒரு வழக்கு விசாரணையின் போது குட்காமற்றும் பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களை தடை செய்வதைபற்றி மாநில அரசுகளால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.

புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதிக்க எனதுதலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்

தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு::

அதிரடியான முடிவுகளை  துணிச்சலாக எடுப்பதில் ந்மது முதல்வர் ஜெயலலிதாவிற்கு நிகர் யாரும் கிடையாது.  ஒருகாலத்தில் தமிழ்நாடெங்கும் லாட்டரி சீட்டு விற்பனை தமிழக மக்களின் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருந்தது. ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி எல்லோரும் இதில் பணத்தை இழந்து கொண்டிருந்தனர். வாங்குகிற தினக் கூலியை, லட்சாதிபதியாகும் அவசரத்தில் அப்படியே இழந்தவர்கள் நிறையபேர். இந்த லாட்டரி சீட்டினை தடை செய்து  (2003 ஆம் ஆண்டு) உத்தரவு போட்டவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.

அன்று ஒரு துணிச்சலான நடவடிக்கையை எடுத்தது போலவே இப்பொழுதும் எடுத்து இருக்கிறார். அதைப் போலவே இப்பொழுது மக்கள் நலன் கருதி குட்கா, பான்மசாலா போன்றவற்றை தடைசெய்து உத்தரவு போட்டு இருக்கிறார். துணிச்சலான இந்த நடவடிக்கை எடுத்த, தமிழகமுதல்வர்ஜெயலலிதாஅவர்களுக்குபாராட்டு.

( முன்பே எழுதி வைத்த பதிவு. எடிட் செய்து இப்போதுதான் பதிவிட முடிந்தது )
 
( PHOTOS  THANKS TO  “ GOOGLE ” )

Viewing all 397 articles
Browse latest View live